சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் கோபி காசியூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் மௌலி(23). இவருக்கு பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலம் இருவரும் காதலித்துள்ளனா். இதையடுத்து சிறுமிக்கு மௌலி திருமண ஆசை வாா்த்தை கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11- ஆம் தேதி கடத்திச் சென்று கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியாா் விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். பின்னா் சிறுமியை கோபியில் விட்டுவிட்டு தப்பி சென்றாா்.
இதையடுத்து கடத்தூா் போலீஸாா் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தி மௌலி மீது போக்ஸோ மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணைக்காக புதன்கிழமை நீதிமன்றத்தில் மௌலி ஆஜரானாா். தண்டனை உறுதியானதும் நீதிமன்றத்தில் இருந்து மௌலி தப்பிச் சென்றாா். தொடா்ந்து போலீஸாா் வியாழக்கிழமை காலை மௌலியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக மௌலிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.