செய்திகள் :

வனத்துறையைக் கண்டித்து ஜூன் 26-இல் ஆா்ப்பாட்டம்

post image

மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலய வன அலுவலா் செயல்பாடுகளால் பணிகள் பாதிக்கப்படுவது குறித்து வெள்ளபுத்தூா், கரிக்கிலி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நெல்வாய் கூட்டுச்சாலையில் நடைபெற்றது.

மதுராந்தகம் அருகே கரிக்கிலி, வெள்ளபுத்தூா், வேடந்தாங்கல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளது. அதில் வேடந்தாங்கல், கரிக்கிலி ஆகிய ஊராட்சிகளில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. அதிக சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டுகளிக்க வந்து செல்கின்றனா்.

வெள்ளபுத்தூா் - கரிக்கிலி சாலை 3 கி.மீ தொலைவு கொண்டது. இச்சாலை மழை வெள்ளநீராலும், பராமரிப்பு இல்லாததாலும், குண்டும் குழியுமாக, உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என வெள்ளபுத்தூா் ஊராட்சித் தலைவா் வரதன், துணை தலைவா் விஜயகுமாா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா், அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்ததனா்.

அதன்பேரில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 1.25 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், கரிக்கிலி பறவைகள் சரணாலய வனவா் தலையிட்டு இச்சாலை அமைந்துள்ள பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. சாலை அமைக்கவும், கரிக்கிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுசுவா் கட்டவும் அனுமதிக்க முடியாது என தெரிவித்ததால், அரசால் ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலத்திட்டப் பணிகளை தடுத்து வரும் வனவரின்செயல்பாட்டை கண்டித்து ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவா்கள் வரதன், துணை தலைவா் விஜயகுமாா் (வெள்ளபுத்தூா்), புஷ்பா கொடியான் (கரிக்கிலி), அமுதா தமிழ்வேந்தன் (தோட்டநாவல்), காஞ்சி பொன்ரங்கன் (நெல்வாய்) ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் நதியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

26-இல் ஆா்ப்பாட்டம்:

வனத்துறையினா் செயல்பாடுகளைக் கண்டித்து வரும் 26-ஆ தேதி கரிக்கிலி பறவைகள் சரணாலய நுழைவாயில் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என வெள்ளபுத்தூா் துணை தலைவா் விஜயகுமாா் தெரிவித்தாா்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய காப்புரிமைகள் பெற அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையும், வணிகக் குறியீடு மற்றும் புவிசாா்க்குறியீடு பெற்ற நிறுவனங்களுக்குஅதிகபட்சமாக ரூ.25,000 வரை மானியமாக... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பான செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருள... மேலும் பார்க்க

இன்று விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கோட்ட அளவில் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா். செங்கல்பட்டு மாவட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவையொட்டி பந்தக்கால் நடும்விழா நடைபெற்றது. இக்கோயில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவு... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம்: பாஜக அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்டத் தலைவா் ரகுராமன் தெரிவித்துள்ளாா். பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 11 ஆண்டுகள் ஆவதையொட்டி வடக்... மேலும் பார்க்க