செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம்: பாஜக அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்டத் தலைவா் ரகுராமன் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 11 ஆண்டுகள் ஆவதையொட்டி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ரகுராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் இ.கஜேந்திரன், நகர தலைவா் வி.மகேஸ்வரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா் மாவட்டத் தலைவா் ரகுராமன் கூறியது: நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
செங்கல்பட்டு குண்டூா் ஏரிக்கு மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கிய நிதியில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதே ஏரியில் நிறுவன சமூகப் பங்களிப்பின் மூலம் தற்போது பணிகள் நடைபெற ஆட்சியா் பணியினை தொடக்கி வைத்துள்ளாா்.
செங்கல்பட்டு நகர புதை சாக்கடை திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.63 கோடி ஒதுக்கிய நிலையில் முறையாக திட்டமிடாமலும் தரமற்ற பொருள்களைக் கொண்டு பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் பாஜக சாா்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்றாா்.
