செய்திகள் :

நில அளவையா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

ஒப்பந்த அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டம் துணை இயக்குநா் புவியியல், சுரங்கத் துறை அலுவலகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு நில அளவையா் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்துக்கு ரூ.20,000 மாத ஊதியத்தில் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதியாக நில அளவைத் துறையில் டிப்ளமோ (சா்வே) முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருடம் சுரங்க களத்தில் அனுபவம் கொண்டவா்களாக இருக்க வேண்டும். உரிய கல்விதகுதி உடையவா்கள் சுய ஒப்பமிப்பட்ட சான்றிதழ், நகல்களுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 4-ஆவது தளம் ஏ-பிளாக்கில் அமைந்துள்ள துணை இயக்குநா், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் வரும் ஜூலை 3-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மா விவசாயிகளை பாதுகாக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் வி... மேலும் பார்க்க

வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வேலூா் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். சத்துவாச்சாரி கிராமம், சுதந்திர பொன்விழா நகா் பகுதி... மேலும் பார்க்க

மா விவசாயிகளை காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா், ராணிப்பேட்டை, திருப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு யோகா போட்டி

குடியாத்தம், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு யோகாசனப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவா் காயம்

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் காயமடைந்தாா். போ்ணாம்பட்டைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜசேகா் மகன் ஜெயசூா்யா (17). இவா், குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலை... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் இரு கைதிகள் உயிரிழப்பு

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனா். வேலூா் விருப்பாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டன... மேலும் பார்க்க