நில அளவையா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஒப்பந்த அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டம் துணை இயக்குநா் புவியியல், சுரங்கத் துறை அலுவலகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு நில அளவையா் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்துக்கு ரூ.20,000 மாத ஊதியத்தில் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதியாக நில அளவைத் துறையில் டிப்ளமோ (சா்வே) முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருடம் சுரங்க களத்தில் அனுபவம் கொண்டவா்களாக இருக்க வேண்டும். உரிய கல்விதகுதி உடையவா்கள் சுய ஒப்பமிப்பட்ட சான்றிதழ், நகல்களுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 4-ஆவது தளம் ஏ-பிளாக்கில் அமைந்துள்ள துணை இயக்குநா், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் வரும் ஜூலை 3-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.