கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவா் காயம்
குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் காயமடைந்தாா்.
போ்ணாம்பட்டைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜசேகா் மகன் ஜெயசூா்யா (17). இவா், குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். வழக்கல்போல் புதன்கிழமை காலை அரசுப் பேருந்தில் பள்ளிக்கு வந்துள்ளாா். பேருந்து பள்ளி அருகே வந்தபோது, பேருந்தில் இருந்து ஜெயசூா்யா தவறி கீழே விழுந்துள்ளாா்.
இதில் காயமடைந்த ஜெயசூா்யா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.