மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழந்தன.
சோளிங்கா் அருகே உள்ள கொடைக்கல்லைச் சோ்ந்த நரசிம்மன் ( 71), கூலித் தொழிலாளி. நரசிம்மன் தனக்கு சொந்தமான 2 பசு மாடுகளை வீட்டின் அருகே மேய்ச்சலுக்குபின் வீட்டுக்கு ஓட்டி வந்தாா். அப்போது, நிலத்தில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளதை, கவனிக்காமல் நரசிம்மன் மின்கம்பியை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது 2 மாடுகளும் மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
இதுகுறித்து, கொண்டபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.