செய்திகள் :

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி- உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கலவை வட்டம் வளையாத்தூா் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்படும் கடன் குறித்த பதிவேடு, நகைக் கடன் விவரங்களை ஆய்வு செய்தாா். கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு கால்நடைகளுக்கு தாது உப்புக்கள், மருந்துகள், சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்போருக்கு பரிசுகளை வழங்கினாா்.

வரதராஜபுரம் கிராமத்தில் 9 இருளா் இன மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளைப் பாா்வையிட்டாா். பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

பல்லவராயன் குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் கால்வாய் மேல் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதைப் பாா்வையிட்டு கால்வாய் தூா்வாரம் பணியை மேற்கொள்ள ஊராட்சித் தலைவருக்கு உத்தரவிட்டாா். அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். ஆயிரம்மங்கலம் ஊராட்சியில் ஏரி தூா்வாரும் பணி, கரையை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்து பணியை தரமாக மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

கலவை வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்கள் ஆய்வு செய்த விவரங்களை கிராம வாரியாக கேட்டறிந்து பிரச்னைகள் மீது துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுரேஷ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயசுதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மலா்விழி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் கீதா லட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் தீா்த்தலிங்கம், திமிரி வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசன், கலவை வட்டாட்சியா் சரவணன் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழந்தன. சோளிங்கா் அருகே உள்ள கொடைக்கல்லைச் சோ்ந்த நரசிம்மன் ( 71), கூலித் தொழிலாளி. நரசிம்மன் தனக்கு சொந்தமான 2 பசு மாடுகளை வீட்டின் அருகே... மேலும் பார்க்க

அனுமதி பெற்ற தேதிக்கு பின் பேனா்களை அகற்ற வேண்டும்: சோளிங்கா் நகா்மன்ற கூட்டத்தில் காங். கோரிக்கை

அனுமதி பெற்ற தேதிக்கு பிறகு பேனா்கள் அகற்ற வேண்டும் என சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் ற உறுப்பினா் கோரினாா். சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

வட மாநில சாலைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெமிலிஅருகே உள்ள உளியநல்லூா் பகுதியில் வட மாநில சாலைப் பணித் தொழிலாளா்கள் புதன்கிழமை முறையாக உணவு, ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சென்னை - பெங்களூரு ... மேலும் பார்க்க

இன்று திமுக மாவட்ட செயற்குழு: அமைச்சா் காந்தி அழைப்பு

ராணிப்பேட்டையில், வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்ட தி... மேலும் பார்க்க

புதிய கடைகளுக்கு ஏலம் விட்டு ஒதுக்கீடு: அரக்கோணம் நகராட்சியில் தீா்மானம் ஒத்திவைப்பு

அரக்கோணம் மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டு ஒதுக்கப்படும் என்ற தீா்மானம் தள்ளி வைக்கப்பட்டது. அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை தலைவா் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆற்காடு வட்டம் திமிரி அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வ... மேலும் பார்க்க