செய்திகள் :

ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

post image

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி

முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்20) ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாட உள்ள முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் கோலி இல்லாதது வருத்தமே என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார். விராட் கோலி குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “இந்திய டெஸ்ட் அணி வரும் போட்டிகளில் தவறவிடப்போவது விராட்டின் போராட்டக் குணத்தை தான்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

விராட் டெஸ்ட் ஓய்வை அறிவித்தப்பின், ‘உங்களுக்கு எதிராக விளையாட முடியாதது என்பது எனக்கு வருத்தம் தான்’ என்று மெசேஜ் செய்திருந்தேன். அந்த அளவுக்கு அவருக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புவேன். நானும் அவரும் களத்தில் போர்குண மனநிலைக் கொண்வர்கள்” என்று கோலி குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"அந்த இரண்டு வீரர்கள் இல்லாதது நிம்மதியாக இருக்கிறது" - இங்கிலாந்து லெஜண்ட்ஸ் குறித்து பண்ட்

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்து அணியை நாளை (ஜூன் 20) எதிர்கொள்ளவிருக்கிறது.ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் கோலி இல்லாததும், மூன்று போட்டியில் மட்டு... மேலும் பார்க்க

TNPL: பந்தை சேதப்படுத்தியதாக அஷ்வின் மீது அளிக்கப்பட்ட புகார் - வாபஸ் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி

டி.என்.பி.எல் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது கொடுத்தப்புகாரை மதுரை பாந்தர்ஸ் அணி திரும்ப பெற முடிவு செய்திருக்கிறது. டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த 14-ந் தேதி... மேலும் பார்க்க

`கொச்சி அணிக்கு ரூ.538 கோடி வழங்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு; என்ன செய்யப்போகிறது BCCI?

இந்தியாவில் 2008-ல் தொடங்கிய ஐ.பி.எல்லில் 2010 வரை மூன்று சீசன்களாக 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.பின்னர், 2011 சீசனில் இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என்ற... மேலும் பார்க்க

"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக, பும்ரா, ஷமி, சிராஜ் போன்றோருக்கு முன்பாக முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் உமேஷ் யாதவ்.கடைசியாக 2023-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்ப... மேலும் பார்க்க

"கோலி இடத்தில் அந்த வீரர்தான் இறங்குவார்" - துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஓப்பன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.கோலி, ரோஹித் இல்லாத அணி, புதிய கேப்டன்... மேலும் பார்க்க

"கேப்டன்சி வேண்டாம் என்று BCCI-யிடம் நான்தான் கூறினேன்; ஏனெனில்..." - மௌனம் கலைத்த பும்ரா

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) முதல் இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா விளைய... மேலும் பார்க்க