செய்திகள் :

இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

post image

கரை ஒதுங்கும் அரிய வகை துடுப்பு மீன்கள், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறி என்ற நிலையில், கடந்த 20 நாள்களில் உலகின் நான்கு இடங்களில் கரைஒதுங்கியருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டூம்ஸ்டே என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த துடுப்பு மீன்கள் மிக நீளமாகவும் பட்டையாகவும் இருக்கின்றன. இவை ஆழ்கடல் வாழ் மீன்கள் என்பதால் இவற்றை கரையோரங்களில் பார்ப்பதே அரிது என்று கூறப்படுகிறது.

இது அண்மையில் தமிழகக் கடற்கரையில் மீனவர்களிடம் பிடிபட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே, இந்த மீன் பற்றிய நம்பிக்கையை அறிந்த மீனவர்களும் உள்ளூர் மக்களும் அச்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த அரிய வகை துடுப்பு மீனை ஏழுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கையிலேந்தி வரும் புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்தான் இந்த மீனைப் பற்றிய தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக 11 மீட்டர் நீளமுள்ள இந்த மீன்கள், சதைப் பற்றுக் குறைவாக இருக்கும். நீள வாக்கில் பாம்புகள் போல கடலுக்கு அடியில் சென்றுகொண்டிருக்கும். இவை எப்போதாவது கரையோரம் தென்பட்டால், ஆழ்கடலில் ஏதேனும் பேரழிவு அல்லது இயற்கைப் பேரழிவு நேரிடும் என்று நம்பப்படுகிறது. இதனை எந்த அறிவியலும் உறுதி செய்யவில்லை என்றாலும், ஜப்பான் மக்களின் தீவிர நம்பிக்கையில் இதுவும் ஒன்றாக உள்ளது.அதாவது ஆழ்கடலில் இருப்பதால், கடலுக்கு அடியில் நிகழும் இயற்கை மாற்றங்களை இவை உணர்ந்துகொண்டு, எச்சரிக்கையாக கரையோரங்களுக்கு வருகின்றன. ஆனால், அதனை ஜப்பான் மக்கள், இயற்கைப் பேரழிவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே அவை கரைக்கு வருவதாக நம்புகிறார்கள்.

ஆனால், இவை உடல் நலம் இழக்கும்போது, வயதாகும்போது கடலில் நீந்த முடியாமல்தான் கரை ஒதுங்குவதாகவும் அல்லது கடலில் ஏற்படும் மாற்றத்தால் மீன்கள் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்குவதால், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க

கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன்- 16, 17 மற்றும் 18... மேலும் பார்க்க