செய்திகள் :

"கோலி இடத்தில் அந்த வீரர்தான் இறங்குவார்" - துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஓப்பன் டாக்

post image

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.

கோலி, ரோஹித் இல்லாத அணி, புதிய கேப்டன் மற்றும் புதிய துணைக் கேப்டன் கொண்ட அணி என்பதால் இந்த அணி மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எந்த மூன்று போட்டிகளில் பும்ரா களமிறங்குவார், அந்த மூன்று போட்டிகளில் பும்ராவுடன் சேர்ந்து பந்துவீசும் மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யார், பும்ரா விளையாடாத போட்டிகளில் வேகப்பந்துவீச்சு யூனிட்டை யார் முன்னெடுப்பது, முழுநேர சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறப்போவது ஜடேஜாவா, குல்தீப் யாதவா, வாஷிங்டன் சுந்தரா எனப் பந்துவீச்சு யூனிட் மீது மட்டுமே அத்தனை கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.

இந்திய அணி
இந்திய அணி

ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கை விட பவுலிங் பலமாக இருப்பது அந்த அணியின் வெற்றிக்குச் சாதகமாக அமையும்.

அதேசமயம், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தும் பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது.

முதலில் ரோஹித் இல்லாததால் ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் இறங்குவது அபிமன்யு ஈஸ்வரனா, சாய் சுதர்சனா, கேப்டன் கில்லா, கோலியின் இடத்தில் களமிறங்குவது யார், கருண் நாயரின் பேட்டிங் ஆர்டர் என்ன? தற்போதைய பேட்டிங் யூனிட்டில் சீனியர் வீரரான கே.எல். ராகுலுக்கு எந்த இடம் போன்ற பல்வேறு கேள்விகள் இருக்கிறது.

இந்த நிலையில், பேட்டிங் ஆர்டரில் கோலியின் இடமான நம்பர் 4-ல் யார் களமிறங்குவார் என்று துணை கேப்டன் ரிஷப் பண்ட் என்று அறிவித்திருக்கிறார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

லீட்ஸ் மைதானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பண்ட், "நம்பர் 3 ஒன்டவுனில் யார் இறங்குவது குறித்து அணியில் இன்னும் உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், நம்பர் 4, நம்பர் 5 உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நம்பர் 4-ல் கில்லும், நம்பர் 5-ல் நானும் களமிறங்குவோம். மற்ற இடங்கள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது." என்று கூறினார்.

"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக, பும்ரா, ஷமி, சிராஜ் போன்றோருக்கு முன்பாக முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் உமேஷ் யாதவ்.கடைசியாக 2023-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்ப... மேலும் பார்க்க

"கேப்டன்சி வேண்டாம் என்று BCCI-யிடம் நான்தான் கூறினேன்; ஏனெனில்..." - மௌனம் கலைத்த பும்ரா

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) முதல் இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா விளைய... மேலும் பார்க்க

TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் 15-வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் பில்டிங்... மேலும் பார்க்க

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. விறுவிப்பான ஆட்டம் | Photo Album

திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்... மேலும் பார்க்க

Kohli: ``சச்சினை விட கோலி சற்று வித்தியாசமான குணமுடையவர்..'' - விவரிக்கும் லெஜண்ட் ஆண்டர்சன்

இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் முதல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது.கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வை அறிவித்ததால், 2014-க்கு பிறகு முதல்முற... மேலும் பார்க்க

"டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெறுங்கள்" - கோலிக்கு மகனின் குறிப்பு... இன்ஸ்டா பதிவை நீக்கிய அனுஷ்கா

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2011 முதல் 14 ஆண்டுகளாக ரன் மெஷினாக விளையாடிவந்த விராட் கோலி, ஐபிஎல் தொடர் பாதியிலேயே மே 12-ம் தேதி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறி... மேலும் பார்க்க