"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ்...
"கோலி இடத்தில் அந்த வீரர்தான் இறங்குவார்" - துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஓப்பன் டாக்
இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.
கோலி, ரோஹித் இல்லாத அணி, புதிய கேப்டன் மற்றும் புதிய துணைக் கேப்டன் கொண்ட அணி என்பதால் இந்த அணி மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எந்த மூன்று போட்டிகளில் பும்ரா களமிறங்குவார், அந்த மூன்று போட்டிகளில் பும்ராவுடன் சேர்ந்து பந்துவீசும் மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யார், பும்ரா விளையாடாத போட்டிகளில் வேகப்பந்துவீச்சு யூனிட்டை யார் முன்னெடுப்பது, முழுநேர சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறப்போவது ஜடேஜாவா, குல்தீப் யாதவா, வாஷிங்டன் சுந்தரா எனப் பந்துவீச்சு யூனிட் மீது மட்டுமே அத்தனை கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.

ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கை விட பவுலிங் பலமாக இருப்பது அந்த அணியின் வெற்றிக்குச் சாதகமாக அமையும்.
அதேசமயம், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தும் பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது.
முதலில் ரோஹித் இல்லாததால் ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் இறங்குவது அபிமன்யு ஈஸ்வரனா, சாய் சுதர்சனா, கேப்டன் கில்லா, கோலியின் இடத்தில் களமிறங்குவது யார், கருண் நாயரின் பேட்டிங் ஆர்டர் என்ன? தற்போதைய பேட்டிங் யூனிட்டில் சீனியர் வீரரான கே.எல். ராகுலுக்கு எந்த இடம் போன்ற பல்வேறு கேள்விகள் இருக்கிறது.
இந்த நிலையில், பேட்டிங் ஆர்டரில் கோலியின் இடமான நம்பர் 4-ல் யார் களமிறங்குவார் என்று துணை கேப்டன் ரிஷப் பண்ட் என்று அறிவித்திருக்கிறார்.

லீட்ஸ் மைதானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பண்ட், "நம்பர் 3 ஒன்டவுனில் யார் இறங்குவது குறித்து அணியில் இன்னும் உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால், நம்பர் 4, நம்பர் 5 உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நம்பர் 4-ல் கில்லும், நம்பர் 5-ல் நானும் களமிறங்குவோம். மற்ற இடங்கள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது." என்று கூறினார்.