செய்திகள் :

"டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெறுங்கள்" - கோலிக்கு மகனின் குறிப்பு... இன்ஸ்டா பதிவை நீக்கிய அனுஷ்கா

post image

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2011 முதல் 14 ஆண்டுகளாக ரன் மெஷினாக விளையாடிவந்த விராட் கோலி, ஐபிஎல் தொடர் பாதியிலேயே மே 12-ம் தேதி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

கோலியின் இந்தத் திடீர் அறிவிப்பு ரசிகர்கள் உட்பட முன்னாள் வீரர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், `2007-க்குப் பிறகு 18 ஆண்டுகளாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணி போராடி வரும் சூழலில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக கோலி ஓய்வை அறிவித்திருக்கக்கூடாது, ஓய்வைத் திரும்பப்பெற வேண்டும்' என்றும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

விராட் கோலி
விராட் கோலி

ஆனால் கோலி அமைதியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில், கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஜூன் 15-ம் தேதி தந்தையர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து தங்களின் மகன் அகாயின் சிறு குறிப்பைப் பதிவிட்டு, பின்னர் நீக்கிய பதிவின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

அந்த ஸ்க்ரீன்ஷாட்டில், "டெஸ்ட் ஓய்வை திரும்பப்பெறுங்கள். தந்தையர் தின வாழ்த்துகள் - அகாய்" என இருந்தது.

பிறகு அனுஸ்கா சர்மா அந்தப் பதிவை நீக்கிவிட்டு, "அவர் (கோலி) என் சகோதரரைப் போல இருக்கிறார். மிகவும் வேடிக்கையானவர். என்னைக் கிச்சு கிச்சு மூட்டுகிறார். அவருடன் நான் விளையாடுகிறேன். அவரை மிகவும் நேசிக்கிறேன். அவரும் என்னை நிறைய நேசிக்கிறார். தந்தையர் தின வாழ்த்துகள் - வாமிகா (கோலி - அனுஷ்கா மகள்)" எனப் பதிவிட்டிருந்தார்.

அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி இல்லாமல் இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில் கோலியின் இடத்தை யார் நிரப்புவார் என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

Kohli: ``சச்சினை விட கோலி சற்று வித்தியாசமான குணமுடையவர்..'' - விவரிக்கும் லெஜண்ட் ஆண்டர்சன்

இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் முதல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது.கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வை அறிவித்ததால், 2014-க்கு பிறகு முதல்முற... மேலும் பார்க்க

Bihar: "வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்..." - 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர்யவன்ஷியின் நண்பன்!

IPL 2025ல் கலக்கிய சிறுவன் சூர்யவன்ஷியின் நண்பன் அயன் ராஜ், மாவட்ட அளவிலான போட்டியில் அதேபாணியில் விளையாடி அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த 30 ஓவர் போட்டியில், 134 பந்துகளில் 22 சிக்... மேலும் பார்க்க

Digvesh Rathi: `5 பந்துகளில் 5 விக்கெட்'- IPLல் 3 முறை அபராதத்துக்குள்ளான மிஸ்ட்ரி ஸ்பின்னர் அசத்தல்

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் கவனம் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 25 வயது அறிமுக சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி.மொத்தம் 13 போட்டிகளில் 8 எக்கனாமியில் 14... மேலும் பார்க்க

Mathews : 'கேப்டனா இருக்கும்போதுதான் என் முடியெல்லாம் கொட்டுச்சு!' - மேத்யூஸ் கலகல

தற்போது நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். ஓய்வு முடிவைப் பற்றிப் பேசுகையில் மேத்யூஸ் சி... மேலும் பார்க்க

TNPL: அண்ணன் - தம்பி அதிரடி அரைசதம்... போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!

டிஎன்பிஎல் 14 -வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந... மேலும் பார்க்க

ENG vs IND: "இந்தியாவின் முன்னணி வீரர் என்னை ஓய்வுபெறச் சொன்னார்; காரணம்..." - பகிரும் கருண் நாயர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016-ல் அறிமுகமாகி, முதல் தொடரிலேயே முச்சதம் அடித்த கருண் நாயர் அடுத்த 6 மாதங்களிலேயே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.அதன்பிறகு அணியில் இடம்பிடிக்க கடுமையாகப் போராடிய கருண் நாயர... மேலும் பார்க்க