கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் ...
"டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெறுங்கள்" - கோலிக்கு மகனின் குறிப்பு... இன்ஸ்டா பதிவை நீக்கிய அனுஷ்கா
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2011 முதல் 14 ஆண்டுகளாக ரன் மெஷினாக விளையாடிவந்த விராட் கோலி, ஐபிஎல் தொடர் பாதியிலேயே மே 12-ம் தேதி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
கோலியின் இந்தத் திடீர் அறிவிப்பு ரசிகர்கள் உட்பட முன்னாள் வீரர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், `2007-க்குப் பிறகு 18 ஆண்டுகளாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணி போராடி வரும் சூழலில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக கோலி ஓய்வை அறிவித்திருக்கக்கூடாது, ஓய்வைத் திரும்பப்பெற வேண்டும்' என்றும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் கோலி அமைதியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில், கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஜூன் 15-ம் தேதி தந்தையர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து தங்களின் மகன் அகாயின் சிறு குறிப்பைப் பதிவிட்டு, பின்னர் நீக்கிய பதிவின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டில், "டெஸ்ட் ஓய்வை திரும்பப்பெறுங்கள். தந்தையர் தின வாழ்த்துகள் - அகாய்" என இருந்தது.
பிறகு அனுஸ்கா சர்மா அந்தப் பதிவை நீக்கிவிட்டு, "அவர் (கோலி) என் சகோதரரைப் போல இருக்கிறார். மிகவும் வேடிக்கையானவர். என்னைக் கிச்சு கிச்சு மூட்டுகிறார். அவருடன் நான் விளையாடுகிறேன். அவரை மிகவும் நேசிக்கிறேன். அவரும் என்னை நிறைய நேசிக்கிறார். தந்தையர் தின வாழ்த்துகள் - வாமிகா (கோலி - அனுஷ்கா மகள்)" எனப் பதிவிட்டிருந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி இல்லாமல் இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில் கோலியின் இடத்தை யார் நிரப்புவார் என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.