செய்திகள் :

TNPL: அண்ணன் - தம்பி அதிரடி அரைசதம்... போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!

post image

டிஎன்பிஎல் 14 -வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

வெற்றியை கொண்டாடும் சேப்பாக் அணி

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் தொடக்கத்தில் அதிரடி காட்டினர்.

திண்டுக்கல் அணி 43 ரன்கள் இருந்த நிலையில், சிவம் சிங் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி திண்டுக்கல் அணியின் ரன்களை உயர்த்தினர். அஸ்வின் 67 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஷைனி 7 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பொறுப்புடன் விளையாடி பாபா இந்திரஜித் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

சேப்பாக் அணியின் பந்துவீச்சாளர் லோகேஷ் ராஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அபிஷேக் தன்வார் இரண்டு விக்கெட்களும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றது.

ENG vs IND: "இந்தியாவின் முன்னணி வீரர் என்னை ஓய்வுபெறச் சொன்னார்; காரணம்..." - பகிரும் கருண் நாயர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016-ல் அறிமுகமாகி, முதல் தொடரிலேயே முச்சதம் அடித்த கருண் நாயர் அடுத்த 6 மாதங்களிலேயே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.அதன்பிறகு அணியில் இடம்பிடிக்க கடுமையாகப் போராடிய கருண் நாயர... மேலும் பார்க்க

WTC: "டெஸ்ட் சாம்பியன்ஷிபை விட IPL முக்கியமா?" - ஹேசல்வுட் மீது கேள்வி எழுப்பிய ஆஸி., முன்னாள் வீரர்

வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் தேசிய கிரிக்கெட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தாண்டி IPL-ல் கவனம் செலுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் சாடியுள்ளார். சமீபத்தில் நடந்து... மேலும் பார்க்க

"2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 7 பேரின் கரியரை பிசிசிஐ அழித்துவிட்டது" - யுவராஜின் தந்தை யோகராஜ்

தோனி தலைமையிலான இந்திய அணி 28 வருடங்களுக்குப் பிறகு 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதைத்தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியைக் கட்டமைக்கும் வேலைகள் மெல்ல மெல்ல நடந்தன.அதேசமயம், அடுத்த இரண்... மேலும் பார்க்க

"சிறுவயதிலிருந்து அவர் எனக்கு இன்ஸ்பிரேஷன்" - கோலி அல்ல தமிழக வீரரைக் குறிப்பிடும் சாய் சுதர்சன்

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் கன்சிஸ்டன்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆரஞ்சு கேப் (759 ரன்கள்) வென்றதன் மூலம், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருக்கிறார் தமிழக வீர... மேலும் பார்க்க

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப... மேலும் பார்க்க

South Africa: 'தென்னாப்பிரிக்காவின் சாபத்தை போக்கிய 'கருப்பு நிலா!' - 'கெத்து பவுமா!'

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை இன்னமும் அப்படியே நினைவில் நிற்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோற்று நிற்கும். கிராண்ட் எலியாட் தென்... மேலும் பார்க்க