செய்திகள் :

அமர்நாத் பாதைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

post image

அமர்நாத் யாத்திரை வழித்தடங்களில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அமர்நாத் யாத்திரை செல்வதற்குப் பாரம்பரிய வழித்தடங்களான பஹல்காம் பாதை மற்றும் குறுகிய பால்டால் பாதை என இரண்டு வழித்தடங்களில் மக்கள் பயணித்து குகைக்கோயிலை அடைகின்றனர்.

வருடாந்திர யாத்திரைக்கான பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமர்நாத் யாத்திரை வழித்தடங்களில் விமானத் தளங்கள் மற்றும் சாதனங்கள் பறப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவின்படி, ஜம்மு-காஷ்மீர் உள்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில்,

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை ட்ரோன்கள், பலூன்கள் உள்ளிட்ட எந்த வகையான விமான தளங்கள் மற்றும் சாதனங்களும் பறப்பதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவ காரணங்கள், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு போன்றவற்றுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. அத்தகைய விதிவிலக்குகளுக்கான விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

ஜூலை 3 முதல் திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரையைக் கருத்தில் கொண்டு, யாத்திரையை சுமுகமாகவும் அமைதியாகவும் நடத்த பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அனைத்து பங்குதாரர்களும் விவாதித்து, கூடுதல் தளவாட ஏற்பாடுகளை முன்மொழிந்துள்ளனர்.

அதன்படி, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை ஸ்ரீ அமர்நாத் யாத்திரையின் முழு பாதையிலும் ஆளில்லாத விமானங்கள் பறக்கத் தடை அறிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அமர்நாத் யாத்திரை நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிப் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய்யான மற்றும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிக்கையை மத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருக... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் ... மேலும் பார்க்க