செய்திகள் :

வார விடுமுறை நாள்கள்: நெல்லைக்கு சிறப்பு ரயில்!

post image

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 21 ஆம் தேதி சென்னை -நெல்லை இடையே தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 21 ஆம் தேதி(சனிக்கிழமை) இரவு 9.55-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45-க்கு நெல்லை சென்றடையும்.

அதேபோல, எதிர் வழித்தடத்தில் நெல்லையிலிருந்து ஜூன் 22ம் தேதி (ஞாயிறு) இரவு 9.40-க்கு புறப்படும் இந்த ரயில், மறு நாள் காலை 8.15-க்கு எழும்பூர் வந்தடையும் என்றும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூன்.18) தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

இதையும் படிக்க: எம். ஜி. ஆர். தேடிக்கொண்டிருந்த ஜோதிடர் யார்?

20 மணி நேரம்! ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய... மேலும் பார்க்க

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும்: விஜய்

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சாதிவார... மேலும் பார்க்க

தென்காசி முதியோர் காப்பகத்தில் பலி 5 ஆக உயர்வு!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று(செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், சுரண்டை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதா... மேலும் பார்க்க

எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று கேள்வி கேட்டதால், கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவா... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!

மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தில்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழின், தமிழர்களின் தொன்மை பற்றிய கீழடி அகழாய்வின் அ... மேலும் பார்க்க