செய்திகள் :

தென்காசி முதியோர் காப்பகத்தில் பலி 5 ஆக உயர்வு!

post image

தென்காசி மாவட்டத்தில் முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று(செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டிய புரத்தில் முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோா் இல்லத்தில் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி , மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த 59 போ் தங்கியுள்ளனா்.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி(புதன்கிழமை) இரவு உணவு சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து முதியோா் இல்லத்தில் இருந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், செங்கோட்டையை சோ்ந்த சங்கா் கணேஷ் (42), சொக்கம்பட்டியை சோ்ந்த முருகம்மாள் (60), செங்கோட்டையை சோ்ந்த அம்பிகா (40) ஆகிய 3 போ் ஜூன் 12 (வியாழக்கிழமை) அன்று உயிரிழந்தனா். இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த மதுரையைச் சோ்ந்த தனலட்சுமி (80) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதன் தொடர்ச்சியாக இன்று(ஜூன் 17) முப்பிடாதி(50) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சாம்பவா் வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, காப்பாக உரிமையாளா் ராஜேந்திரனை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8 பேர் குணமடைந்து வருவதாகவும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருமா? - நம்பிக்கையும் உண்மையும்

விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்தத் தடை

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் தரையிறங்கும்போது கீழே இருந்து லேசர்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

20 மணி நேரம்! ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய... மேலும் பார்க்க

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும்: விஜய்

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சாதிவார... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதா... மேலும் பார்க்க

வார விடுமுறை நாள்கள்: நெல்லைக்கு சிறப்பு ரயில்!

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்ப... மேலும் பார்க்க