செய்திகள் :

Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி?

post image

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த வருகின்றன. இருப்பினும் பாலியல் துன்புறுத்தல்கள், பைக் டாக்ஸி சேவையை தவறாகப் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் கடந்த ஆண்டு இந்த சேவைக்கு வழங்கிய அனுமதியை கர்நாடக அரசு திரும்பப் பெற்றிருந்தது. பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

Bike Taxi Ban
Bike Taxi Ban

தற்போது இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து, ஜூன் 16 ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவையை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவால் பைக் டாக்ஸி நிறுவனங்கள் தங்களின் பைக் டாக்ஸி சேவையை நிறுத்தும் நிலை ஏற்பட இருந்தது.

இருப்பினும், உயிர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மீதான மேல்முறையீடு ஜூன் 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதுவரை பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பெயர் மாற்றம் செய்து தொடரும் பைக் டாக்ஸி சேவை

இந்நிலையில் பைக் டாக்ஸி நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையை, பார்சல் சேவை (Bike Parcel/ Moto Courier) எனப் பெயர் மாற்றம் செய்து தங்கள் சேவைகளைத் தொடர்ந்து வருகின்றன. சட்டத்தின் படி பைக் டாக்ஸிக்குத்தான் தடை. பார்சல் சேவைகளுக்குத் தடை இல்லை. இதன் அடிப்படையில் பைக் டாக்ஸி நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் குழு புத்திசாலித்தனமாக வார்த்தைகளில் விளையாடி சேவைகளைத் தொடர வழிவகை செய்திருக்கின்றன. பைக் டாக்ஸி நிறுவனங்களின் இந்தச் செயலை அதன் செயலிகளில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Plane crash: ``அவன் கடைசியாக சொன்ன வார்த்தை..'' - பலியான விமானியின் தந்தை கூறி அழுத சோகம்

அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 240-க்கும் மேற்பட்டோர் இந்த கோர விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூப... மேலும் பார்க்க

``1988-ல் நடந்த விமான விபத்து; போதுமான இழப்பீடு வழங்கவில்லை..'' - 37 ஆண்டுகள் போராடும் குடும்பங்கள்

அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமான விபத்து, ஒரு பெரும் சோக நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த கோர விபத்தில் சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து... மேலும் பார்க்க

Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்' - வீடியோ வெளியிட்ட மத்திய அரசு

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள், இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தும் முடிக்கப்படவில்லை.6 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரகம் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பாகில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கிடப்பில் போடப்பட்ட ரவுண்டானா பணி; அச்சத்தில் மக்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையானது மிகவும் பரபரப்பான பிரதான சாலையாகும். இந்த பிரதான டி.எஸ்.ஃஎப் சாலைய... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வா... மேலும் பார்க்க