செய்திகள் :

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

post image

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்தப் படுகொலைகளுக்கான சூழல் குறித்து உடனடி தகவல் இல்லை. மேலும், அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோகத்துக்கும்&தச் சம்பவத்துக்கும் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.பட்டினியால் வாடும் பாலஸ்தீனா்கள் உணவுப் பொருள்களுடன் வரவிருந்த லாரிகளுக்காக காத்திருந்தபோது இஸ்ரேல் படையினா் அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறினா்.

மூன்று வாரங்களுக்கு முன்னா் காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோா் மீது இஸ்ரேல் படையினா் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதில் இதுவரை நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.தங்கள் வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒப்புக்கொள்ளும் இஸ்ரேல் ராணுவம், நிவாரணப் பொருள்களை வாங்க வருவதற்கான நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவா்களை நோக்கிதான் வீரா்கள் சுடுவதாகக் கூறுகிறது.

தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விநியோக வழிமுறைகள், நிவாரணப் பொருள்கள் ஹமாஸ் கைகளுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அண்மையில் கூறியது.இந்தச் சூழலில், உணவுப் பொருளுக்காக காத்திருந்தவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 45 போ் உயிரிழந்ததாக தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ந... மேலும் பார்க்க

தலாய் லாமாவின் பிறந்த நாள் கருணை தினம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

திபெத்திய பௌத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் 90-ஆவது பிறந்தநாளை (ஜூலை 6) ‘கருணை தினமாக’ அறிவிக்கக்கோரி இரு உறுப்பினா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தனா். ஆள... மேலும் பார்க்க

ஈரான் மீது தீவிர தாக்குதல்: இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த... மேலும் பார்க்க