பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!
ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கும் நிலையில், அவரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
கமேனி சரணடைந்துவிட்டால் பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று டிரம்ப் எண்ணுகிறார்.
இதுகுறித்து டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது: ஈரானின் உச்சபட்ச தலைவராக அறியப்படுபவரைக் கொல்ல இப்போதைக்கு திட்டம் தீட்டவில்லை. அவர் பதுங்கியிருக்குமிடம் எங்களுக்கு தெரியும். இந்த நிலையில், அவர் சரணடைவதே சிறந்த தீர்வு என்றும் டிரம்ப் சொல்லியிருக்கிறார்.
எனினும், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து கமேனி சரணடைவாரா என்பது கேள்விக்குறியே.