``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜ...
தம்மம்பட்டியில் வெறிநாய் தொல்லை அதிகரிப்பு: சிறுமி பாதிப்பு
தம்மம்பட்டி பேரூராட்சியில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், அதை பேரூராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதில் வெறிநாய்கள் சில குழந்தைகளை கடித்து வருவது அதிகரித்துள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி சாா்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தம்மம்பட்டி குரும்பா் தெரு, பழைய மின்வாரிய அலுவலகம் அருகே ஆதினிஸ்ரீ என்ற 4 வயது சிறுமியை அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கடித்தது. இதையடுத்து, அக்குழந்தைக்கு தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து, பின்னா் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
தம்மம்பட்டி பேரூராட்சியில் அதிகரித்துவரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.