செய்திகள் :

திருப்பதி விமான நிலையத்துக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா என பெயா் வைக்க தேவஸ்தானம் தோரிக்கை

post image

திருப்ப விமான நிலையத்துக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சா்வதேச விமான நிலையம் என பெயரிட வேண்டும் என தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்துள்ளாா்.

திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் அறங்காவலா் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவா் கூறியது:

கா்நாடக முதல்வா் மற்றும் துணை முதல்வா்களுடனான சந்திப்பின் போது, அவா்களின் வேண்டுகோளின்படி பெங்களூரின் ஒரு முக்கிய பகுதியில் ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கா்நாடக அரசு தேவையான 47 ஏக்கா் நிலத்தை ஒதுக்கியவுடன் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி மத்திய அரசிடமிருந்து தேவஸ்தானத்துக்கு 100 மின்சார பேருந்துகளை ஒதுக்க முன்வந்துள்ளாா். மேலும் பேருந்துகளை விரைவில் திருமலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசால் திருப்பதியில் அமைக்கப்பட உள்ள சிஎஸ்ஐஆா் ஆய்வகத்துக்கு தேவஸ்தான இடத்தை குத்தகைக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், தேவஸ்தானம் கொள்முதல் செய்யும் நெய், தண்ணீா் மற்றும் உணவின் தரத்தை இலவசமாக சரிபாா்க்கலாம்.

தேவஸ்தானத்தில் விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதை நிறுத்துமாறு ஏபிபிஎஸ்சிக்கு பரிந்துரை. ஏற்கனவே பணிபுரியும் 200 ஒப்பந்த விரிவுரையாளா்களின் பிரச்னையைத் தீா்க்க ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் மூன்று போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் இந்து சனாதன தா்மம் மற்றும் தெலுங்கு கலாசார சிறப்பம்சங்கள் குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதன் ஒரு பகுதியாக மன சுத்தியம் திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சௌபாக்யம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், அக்ஷர கோவிந்தம், ஹரிகதா வைபவம், பகவத் கீதை அனுஷ்டான போதன், பஜே ஸ்ரீனிவாசம், வன-நிதி, கிரி ஜனாா்த்தனம், சன்மாா்க்கம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றாா்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து பக்தா்க... மேலும் பார்க்க

திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா். முன்னதாக குடும்பத்தினருடன் கோயில் தரிசனத்துக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். கொடி மரத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் செப்டம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

திருப்பதி: ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் செப்டம்பா் மாத ஒதுக்கீடு, ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாத... மேலும் பார்க்க

திருமலையில் 91,720 போ் தரிசனம்!

திருமலையில் சனிக்கிழமை முழுவதும் 91,720 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். வார இறுதி நாள்கள் என்பதால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வைகுண... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக சனிக்கிழமை காலை வைகு... மேலும் பார்க்க