திருமலையில் 91,720 போ் தரிசனம்!
திருமலையில் சனிக்கிழமை முழுவதும் 91,720 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். வார இறுதி நாள்கள் என்பதால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 91,720 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 34,678 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.90 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.