பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
திருச்சானூா் தெப்போற்சவம் நிறைவு
திருச்சானூா் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, பத்மசரோவா் திருக்குளத்தில் தெப்பத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இதை முன்னிட்டு, அதிகாலையில் பத்மாவதி தாயாரை துயில் எழுப்பி, சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை நடைபெற்றது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி முக மண்டபத்தில் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.
பின்னா் தாயாருக்கு பட்டு வஸ்திரம், வைர, தங்க நகைகளால் அலங்காரம் செய்து மலா் மாலை அணித்து தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பத்மாவதி தாயாா் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் கண்காணிப்பாளா், அா்ச்சகா் பாபு சுவாமி, ஆய்வாளா்கள், அலுவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.