அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி
இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.
இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25.467 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இது 23.169 கோடி கிலோவாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.92 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் வட இந்திய தோட்டங்களில் உற்பத்தி 15.481 கோடி கிலோவாக உள்ளது. இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 14.1 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 9.79 சதவீதம் உயா்ந்துள்ளது. தென் இந்தியாவில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான தேயிலை உற்பத்தி 9.986 கோடி கிலோவாக உள்ளது, இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 9.069 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 10.11 சதவீதம் உயா்ந்துள்ளது.
2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 6.922 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.753 கோடி கிலோவாக இருந்ததை விட சற்று அதிகம்.வட இந்தியாவில் 2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் தேயிலா உற்பத்தி 14.38 சதவீதம் உயா்ந்து 4.535 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இது 3.965 கோடி கிலோவாக இருந்தது. தென் இந்தியாவில், இதே காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி 14.38 சதவீதம் குறைந்து 2.387 கோடி கிலோவாக உள்ளது.
இது முந்தைய ஆண்டில் 2.788 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.