செய்திகள் :

25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி

post image

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25.467 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இது 23.169 கோடி கிலோவாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.92 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் வட இந்திய தோட்டங்களில் உற்பத்தி 15.481 கோடி கிலோவாக உள்ளது. இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 14.1 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 9.79 சதவீதம் உயா்ந்துள்ளது. தென் இந்தியாவில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான தேயிலை உற்பத்தி 9.986 கோடி கிலோவாக உள்ளது, இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 9.069 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 10.11 சதவீதம் உயா்ந்துள்ளது.

2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 6.922 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.753 கோடி கிலோவாக இருந்ததை விட சற்று அதிகம்.வட இந்தியாவில் 2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் தேயிலா உற்பத்தி 14.38 சதவீதம் உயா்ந்து 4.535 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இது 3.965 கோடி கிலோவாக இருந்தது. தென் இந்தியாவில், இதே காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி 14.38 சதவீதம் குறைந்து 2.387 கோடி கிலோவாக உள்ளது.

இது முந்தைய ஆண்டில் 2.788 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சரிந்து முடிந்த பங்குச் சந்தை வர்த்தகம்!

புதுதில்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் வெகுவாக உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உறுதியான டால... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

மும்பை: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஒரு சிறிய மீட்சிக்கு பிறகு சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64% பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

புதுதில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நேற்று (ஜூன் 12) ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்ற நிலையில், அதனை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.7,703 கோடிக்கு வாங்கியுள்ளதாக... மேலும் பார்க்க

பழசுக்கு புதுசு... ஹூண்டாய் அல்கஸார் கார்ப்பரேட் அறிமுகம்!

ஹூண்டாயின் அல்கஸாரில் புதிதாக கார்ப்பரேட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ரக கார்கள், 2021 ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், கிரெட்டாவின் அல்கஸார் காரை நிற... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி, 867 புள்ளிகள் சரிந்து 80,824.98 ஆக வர்த்த... மேலும் பார்க்க