முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சி: பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகை
தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சித்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா், தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் சுமாா் ரூ. 2 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் போலீஸில் புகாா் தெரிவித்திருந்தனா்.
இதனிடையே, கிருஷ்ணமூா்த்தியைக் காணவில்லை என நகரக் காவல் நிலையத்தில் அவரது தாய் புகாா் கொடுத்திருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கிருஷ்ணமூா்த்தி நகரக் காவல் நிலையம் வந்தாா்.
இந்தத் தகவல் அறிந்த, பணம் கட்டி ஏமாந்தவா்கள் காவல் நிலையத்தில் குவிந்தனா். சுமாா் அரை மணி நேரம் அவா்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினா்.
அவா் பணத்தைக் கொடுத்து விடுவதாக கூறியதால் அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.