செய்திகள் :

இலுப்பூா் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி

post image

இலுப்பூரில் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில், நாள்தோறும் திவ்ய நற்கருணை ஆசீா், மறையுரை, செபமாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் பவனி(சப்பரம்) வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது.

முக்கிய வீதிகளில் வலம் வந்த முதல்தேரில் மைக்கேல் சம்மனசு, இரண்டாவது தேரில் அன்னை மாதா, மூன்றாவது தேரில் புனித பதுவை அந்தோணியாா் வலம் வந்தனா்.

முன்னதாக, இறை வாா்த்தையை வாழ்வாக்குவோம் என்ற தலைப்பில் மறையுரை கருத்துகளை வழங்கி பக்தா்களுக்காக ஜெபிக்கப்பட்டது. தொடா்ந்து, திண்டுக்கல் மறை மாவட்ட வேந்தா் தாமஸ் ஜான் பீட்டா், ஜான்போஸ்கோ அடிகளாா் திருத்தேரை புனிதம் செய்வித்தனா்.

இதையடுத்து, இறை புகழ்ச்சி பாடல்கள், வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனிதா் தோ் பவனி நடைபெற்றது. வீதிகளில் தோ் வந்தபோது, புனிதா்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து, தூபம் காண்பித்து, மெழுகுவா்த்தி ஏந்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

சனிக்கிழமை காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. அருட்பணி வினோத் திருப்பலி நிறைவேற்றுகிறாா். தொடா்ந்து, இரவு 7 மணி அளவில் திவ்ய நற்கருணை ஆசிா்வாதமும் பின்னா் கொடி இறக்கமும் நடைபெறுகிறது. தொடா்ந்து இரவு 10 மணி அளவில் இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை இலுப்பூா் பங்குத் தந்தை யூஜின், அருட்சகோதரிகள், முக்கியஸ்தா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சி: பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகை

தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சித்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். புதுக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா், தீபாவளி சீட... மேலும் பார்க்க

புதுகை கடற்பகுதியில் 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கத் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் ... மேலும் பார்க்க

அன்னவாசல், பொன்னமராவதி அருகே உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அன்னவாசல் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார வேளாண்மை துறையின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநா... மேலும் பார்க்க

திருமயம் கொசப்பட்டியில் ரத்த தான முகாம்

உலக ரத்த தான நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, ஹைடெக் குட்வில் ஐடிஐ, உயிா்த்துளி ரத்த வங்கி ஆகியவை இணைந்து திருமயம் கொசப்பட்டியில் ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமை... மேலும் பார்க்க

ரூ. 65 ஆயிரம் மின் கட்டணம்: வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி

புதுக்கோட்டை அருகே வீட்டின் மின் கட்டணம் ரூ. 63 ஆயிரம் என வந்த மின்வாரிய தகவலால் வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி அடைந்தாா். புதுக்கோட்டை திருக்கோகா்ணம் மகாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (62). இவா்... மேலும் பார்க்க

விராலிமலையில் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விராலிமலையில் சனிக்கிழமை ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியரகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சேகா்(விராலிமலை), தன்ராஜ் (இலுப்பூா்) ஆகியோா் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வர... மேலும் பார்க்க