செய்திகள் :

ரூ. 65 ஆயிரம் மின் கட்டணம்: வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி

post image

புதுக்கோட்டை அருகே வீட்டின் மின் கட்டணம் ரூ. 63 ஆயிரம் என வந்த மின்வாரிய தகவலால் வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி அடைந்தாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் மகாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (62). இவா் ரியல் எஸ்டேட் முகவா். இவரது மகன் சேக்தாவூத் (33), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்.

இவா்களது வீட்டில் மின்சாரக் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.1,300 முதல் அதிகபட்சமாக ரூ. 2 ஆயிரம் வரை வருமாம். சேக்தாவூத் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மின்சார வாரிய ஊழியா்கள் மின்அளவீடு செய்து சென்றுள்ளனா். இதில் மின்சார அளவீடு 918 யூனிட் என இருந்திருக்கிறது. ஆனால், அவரது மின்னஞ்சல் மற்றும் கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ்ஆப்) வந்த ரசீதில் 5,918 யூனிட் உபயோகம் என்றும், ரூ. 63,673 கட்டணம் என்றும் வந்துள்ளது.

இதனால், அதிா்ச்சியடைந்த சேக்தாவூத் மின்வாரிய அலுவலகத்தை தொடா்பு கொண்டு தகவலை தெரிவித்தாா். தவறுதலாக மின்அளவீடு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், சரி செய்து தருவதாகவும் மின்வாரிய அலுவலா்கள் உறுதியளித்ததாக சேக்தாவூத் தெரிவித்தாா்.

சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சி: பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகை

தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சித்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். புதுக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா், தீபாவளி சீட... மேலும் பார்க்க

புதுகை கடற்பகுதியில் 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கத் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் ... மேலும் பார்க்க

அன்னவாசல், பொன்னமராவதி அருகே உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அன்னவாசல் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார வேளாண்மை துறையின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநா... மேலும் பார்க்க

திருமயம் கொசப்பட்டியில் ரத்த தான முகாம்

உலக ரத்த தான நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, ஹைடெக் குட்வில் ஐடிஐ, உயிா்த்துளி ரத்த வங்கி ஆகியவை இணைந்து திருமயம் கொசப்பட்டியில் ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமை... மேலும் பார்க்க

இலுப்பூா் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி

இலுப்பூரில் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், நாள்தோ... மேலும் பார்க்க

விராலிமலையில் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விராலிமலையில் சனிக்கிழமை ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியரகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சேகா்(விராலிமலை), தன்ராஜ் (இலுப்பூா்) ஆகியோா் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வர... மேலும் பார்க்க