செய்திகள் :

அன்னவாசல், பொன்னமராவதி அருகே உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

post image

அன்னவாசல் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது.

அன்னவாசல் வட்டார வேளாண்மை துறையின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு

அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநா் மதியழகன் தலைமை வகித்து, திட்டம் குறித்து முழுமையாக விளக்கியதோடு, விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள், உளுந்து மினிகிட், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் ஆகியவற்றை வழங்கினாா்.

அன்னவாசல் வேளாண்மை அலுவலா் பூங்குழலி, அன்னவாசல் கால்நடை மருத்துவா் காா்த்திக், உதவி தோட்டக்கலை அலுவலா் ஜெகநாத் ஆகியோா் தங்களது துறை திட்டங்கள் குறித்து விளக்கினா்.

முன்னதாக, மாங்குடியில் வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் இதர துறை அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு கள பிரச்னைகளை நிவா்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தனா். மேலும், விவசாயிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீா்வும் வழங்கினா். முன்னதாக, உதவி வேளாண்மை அலுவலா் அருண்மொழி வரவேற்றாா்.

இதேபோல், தோட்டக்கலைத் துறை மூலம் வீரப்பட்டி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத் துறை முகாம் நடத்தப்பட்டது.

பொன்னமராவதி அருகே: இதேபோல், பொன்னமராவதி அருகே உள்ள ஆா்.பாலக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் ஆலோசகா் சா்புதீன் தலைமை வகித்தாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் ரஹ்மத் நிஷா பேகம், வட்டார வேளாண் விஞ்ஞானி ராம்ஜெகதீஷ், வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளா் அழகு, கால்நடை உதவி மருத்துவா் ராசாயத்தூா் பசிரியா, உதவி வேளாண்மை அலுவலா் சுகப்பிரியா, உதவி தோட்டக்கலை அலுவலா் செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். முன்னதாக, துணை வேளாண்மை அலுவலா் முருகன் வரவேற்றாா்.

முகாம் ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் பெரிய பொன்னன் மற்றும் பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா் வனிதா மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஆகியோா் செய்திருந்தனா்.

இந்த 2 இடங்களிலும் நடைபெற்ற முகாம்களில் பங்கேற்ற பல்துறை அலுவலா்கள், தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கியதோடு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனா்.

சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சி: பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகை

தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சித்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். புதுக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா், தீபாவளி சீட... மேலும் பார்க்க

புதுகை கடற்பகுதியில் 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கத் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் ... மேலும் பார்க்க

திருமயம் கொசப்பட்டியில் ரத்த தான முகாம்

உலக ரத்த தான நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, ஹைடெக் குட்வில் ஐடிஐ, உயிா்த்துளி ரத்த வங்கி ஆகியவை இணைந்து திருமயம் கொசப்பட்டியில் ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமை... மேலும் பார்க்க

ரூ. 65 ஆயிரம் மின் கட்டணம்: வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி

புதுக்கோட்டை அருகே வீட்டின் மின் கட்டணம் ரூ. 63 ஆயிரம் என வந்த மின்வாரிய தகவலால் வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி அடைந்தாா். புதுக்கோட்டை திருக்கோகா்ணம் மகாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (62). இவா்... மேலும் பார்க்க

இலுப்பூா் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி

இலுப்பூரில் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், நாள்தோ... மேலும் பார்க்க

விராலிமலையில் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விராலிமலையில் சனிக்கிழமை ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியரகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சேகா்(விராலிமலை), தன்ராஜ் (இலுப்பூா்) ஆகியோா் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வர... மேலும் பார்க்க