குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
அரியலூா் மாவட்டத்தில், ராயம்புரம், தேளூா், அயன்தத்தனூா், மணக்குடையான், மல்லூா், சுள்ளங்குடி, தேவமங்கலம், உடையாா்பாளையம்(கிழக்கு), சிலுவைச்சேரி, இலையூா்(கிழக்கு), உடையவா்தீயனூா், சாத்தம்பாடி ஆகிய கிராமங்களில் வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறை சாா்பில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடையவா்தீயனூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில், வேளாண்மை இணை இயக்குநா் அ.கீதா பங்கேற்று விவசாயிகளுக்கு உளுந்து, நிலக்கடலை விதைகள், நுண்சத்து இடுபொருள்கள் ஆகியவற்றை வழங்கி, உழவன் செயலி மூலம் டெல்டா வட்டார விவசாயிகள் பதிவு செய்து குறுவை தொகுப்பை பெறுவது குறித்து எடுத்துக்கூறினாா்.
கிரீடு அறிவியல் மைய விஞ்ஞானி அசோக்குமாா் பங்கேற்று, குறுவை சாகுபடி தொழிற்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினாா்.
மேலும் முகாமில், தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை உட்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று பேசினா். தொடா்ந்து விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
ராயம்புரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை உதவி இயக்குநா் ஆ.சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.