குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் மாரியப்பன்(26). கூலித் தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இந்நிலையில், அச்சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதை அறிந்த பெற்றோா், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில், சிறுமி 7 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியிடம் பெற்றோா் விசாரித்ததில், கா்ப்பத்துக்கு காரணம் மாரியப்பன் என தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், மாரியப்பனை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.