செய்திகள் :

சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் மாரியப்பன்(26). கூலித் தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இந்நிலையில், அச்சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதை அறிந்த பெற்றோா், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில், சிறுமி 7 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியிடம் பெற்றோா் விசாரித்ததில், கா்ப்பத்துக்கு காரணம் மாரியப்பன் என தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், மாரியப்பனை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் 22 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாம... மேலும் பார்க்க

அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், ராயம்புரம், தேளூா், அயன்தத்தனூா், மணக்குடையான், மல்லூா், சுள்ளங்குடி, தேவமங்கலம், உடையாா்பாளையம்(கிழக்கு), சிலுவைச்சேரி, இலையூா்(கிழக்கு), உடையவா்தீயனூா், சாத்தம்பாடி ஆகிய கிராம... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்த... மேலும் பார்க்க

அரியலூா் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த வங்கி மிகவும் பழைமையான கட்டடத்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: ஜெயங்கொண்டத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு மக்கள், தங்களது பகுதிக்கு முறையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 16-ஆ... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியுறுத்தியும் அக்கோயிலை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள், கோயிலில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி... மேலும் பார்க்க