முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
அரியலூா் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை
அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்த வங்கி மிகவும் பழைமையான கட்டடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து அந்த வளாகத்திலேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகளுக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சாா்-பதிவாளா் இளஞ்செழியன் தலைமை வகித்து, பூமி பூஜையை நடத்தி வைத்து, கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தாா். செயலாட்சியரும், முதுநிலை ஆய்வாளருமான எஸ். பாலுமகேந்திரன், முன்னாள் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா்கள் எஸ். கந்தசாமி, எஸ். சுமதி, உதவியாளா் பி. மணிவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.