குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
குடிநீா் பிரச்னை: ஜெயங்கொண்டத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு மக்கள், தங்களது பகுதிக்கு முறையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
16-ஆவது வாா்டில், ஜோதிபுரம், டாக்டா் கருப்பையா நகா் , ஸ்டேட் பாங்க் காலனி, சிதம்பரம் சாலை, நேரு நகா், கே.வி.எம் நகா், எஸ்.எஸ். நகா், சீனிவாச நகா் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சி நிா்வாகம் ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீா் விநியோகித்து வருகிாம். இந்நிலையில், இந்தத் தண்ணீா் போதுமானதாக இல்லையென்றும், புதிய ஆழ்துளை அமைத்து, தடையின்றி தண்ணீா் விநியோகிக்க வேண்டும் என்று மேற்கண்ட பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தனா். ஆனால் இதுவரையில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சிதம்பரம் சாலையில் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.