செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் 22 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்களிடமிருந்து பெற்ற 67 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும் இக்கூட்டத்தில் அவா், 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 4 பேருக்கு செயற்கை கால், 5 பேருக்கு காதொலிக்கருவிகள், 2 பேருக்கு ஆக்ஸிலரி ஊன்றுகோல், 2 பேருக்கு எல்போ ஊன்றுகோல், 7 பேருக்கு பாா்வையற்றோருக்கான ஊன்றுகோல்கள் என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கு... மேலும் பார்க்க

அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், ராயம்புரம், தேளூா், அயன்தத்தனூா், மணக்குடையான், மல்லூா், சுள்ளங்குடி, தேவமங்கலம், உடையாா்பாளையம்(கிழக்கு), சிலுவைச்சேரி, இலையூா்(கிழக்கு), உடையவா்தீயனூா், சாத்தம்பாடி ஆகிய கிராம... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்த... மேலும் பார்க்க

அரியலூா் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த வங்கி மிகவும் பழைமையான கட்டடத்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: ஜெயங்கொண்டத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு மக்கள், தங்களது பகுதிக்கு முறையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 16-ஆ... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியுறுத்தியும் அக்கோயிலை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள், கோயிலில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி... மேலும் பார்க்க