செய்திகள் :

ஷுப்மன் கில் இடத்தில் நான் இருந்தால்... ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

post image

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் திடலில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: வெற்றியை நோக்கிப் பயணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு முன்னாள் கேப்டன் பாராட்டு!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மூத்த வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது இளம் இந்திய அணி.

ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், தன் மீது அதிப்படியான எதிர்பார்ப்புகள் இருப்பதை ஷுப்மன் கில் உணர்ந்திருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஷுப்மன் கில் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உருவாகிவிட்டதாக நினைக்கிறேன். கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கான பொறுப்புகளும் அதிகரித்துள்ளன. இது போன்ற அதிக அழுத்தம் நிறைந்த இடத்தில் நான் இருந்தால், ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க வேண்டும் என நினைப்பேன்.

இதையும் படிக்க: லயனிடம் ஆட்டமிழக்காத ஒரே வீரர் மார்க்ரம்..! ஐசிசி கோப்பையை வாங்கித்தரும் நாயகன்!

இங்கிலாந்து ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தால், அவரது நம்பிக்கை அதிகரிக்கும். பேட்டராக நன்றாக விளையாடும் பட்சத்தில், கேப்டனாகவும் அவரது நம்பிக்கை அதிகரிக்கும். ஷுப்மன் கில் மிகவும் சிறப்பான வீரர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்து, அதிக அளவிலான கேள்விள் எழுவதை தவிர்ப்பார் என நம்புகிறேன் என்றார்.

டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திட... மேலும் பார்க்க

கேப்டனாக ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சா... மேலும் பார்க்க

முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பி... மேலும் பார்க்க

நம்பிக்கை அளிக்கும் மிட்செல் ஸ்டார்க்: இறுதிக் கட்டத்தில் தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மிட்செல் ஸ்டார் இன்னமும் நம்பிக்கையை அளிக்கும் விதமாக பந்துவீசி வருகிறார். முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க, தெ.ஆ. 138க்கு ஆட்டமிழந்தது.இரண்டாம் இன்னிங... மேலும் பார்க்க

40 வயதிலும் பந்தினை பாய்ந்து பிடித்த டு பிளெஸ்ஸி: டிஎஸ்கே த்ரில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. அமெரிக்காவில் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் எம்ஐ நியூயார்க் இ... மேலும் பார்க்க