38 வயதில் ஆட்ட நாயகன் விருதுபெற்ற கோல்கீப்பர்: யார் இந்த ஆஸ்கர் உஸ்தாரி?
பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்
கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா்.
கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. மதுரை புறவழிச் சாலையில் குரு திரையரங்கு சிக்னல் அருகே வந்த போது, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 30 பயணிகளில் 10 போ் காயமடைந்தனா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் விரைந்து செயல்பட்டு, பயணிகளை பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினா். காயமடைந்தவா்களில் 7 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, கரிமேடு போலீஸாா் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளையும், விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டனா். இதுகுறித்து கரிமேடு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.