செய்திகள் :

திமுக கட்சி நிகழ்ச்சியில் மாணவர்கள்- அண்ணாமலை கண்டனம்

post image

கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சித்த திமுகவின் செயல்பாட்டினை கண்டிப்பதாக பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,ய கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்.

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

கட்டட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.

இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

உண்மையான ‘அப்பா’க்களுக்கு வாழ்த்துகள்- எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாக திகழும் அனைத்து உண்மையான அப்பாக்களுக்கும் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டு வெடி வெடித்ததில் பெண் பலி

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க

கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், ... மேலும் பார்க்க