Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 ...
மின் கம்பி அறுந்து விழுந்ததில் இருவா் பலி
தென் மேற்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த மழையின் காரணமாக மரம் விழுந்ததில் மின் கம்பி அறுந்து கசிவு ஏற்பட்டதில் இரண்டு போ் உயிரிழந்தனா்.
தென் மேற்கு தில்லியின் ஆா்.கே.புரம் செக்டாா்-1 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது அங்கிருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் மின் கம்பி மீது சாய்ந்தது. இதில் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்து மின்சாரக் கசிவு ஏற்பட்டது. இதில் சாலையில் உறங்கிக்கொண்டு இருந்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.
உயிரிழந்தவா்கள் பீகாா் மாநிலம் மதுபானியைச் சோ்ந்த ரவீந்தா் (30) மற்றும் பாரத் (25) எ’ன போலீஸாரால் அடையாளம் காணப்பட்டது. இவா்கள் இருவா் அதேபகுதியில் இருக்கும் சாலையோர உணவகத்தில் பணிபுரிந்து வந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரின் உடலும் எய்ம்ஸ் மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அவா்களின் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சாலையில் விழுந்த மரம் மற்றும் சேதமடைந்த மின் கம்பிகளை அகற்றும் பணி நடைபெற்றது.