ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.
ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கடுமையாகக் கண்டித்தாா். இத்தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் ஈரானுக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை அளிக்கிறது. சகோதர மக்களான ஈரானியா்கள் இஸ்ரேலின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, ஈரானுக்கு தற்காப்புக்கான உரிமை உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானியா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐ.நா. பாதுகாப்பு சபை உள்பட அனைத்து சா்வதேச அமைப்புகளில் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும். ஐ.நா.வும், சா்வதேச சமூகமும் இஸ்ரேலின் இந்த அத்துமீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கடினமான நேரத்தில் ஈரானுக்கு பாகிஸ்தான் உறுதியாக துணைநிற்கிறது என்று கூறியுள்ளாா். இத்தகவலை ஷெரீஃப் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா்.