Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!
ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள்ள மோட்பரி நாா்த் பகுதியைச் சோ்ந்தவா் கௌரவ் குந்தி. கடந்த சில நாள்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள ராய்ஸ்டன் பூங்கா அருகே சாலையில் மனைவி அமிா்தபால் கெளருடன் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இதனைக் கவனித்த அவ்வழியே சென்ற ரோந்து காவலா்கள், பொதுஇடத்தில் பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி கௌரவைக் கைது செய்ய முயன்றனா்.
கைது முயற்சிக்கு கௌரவ் ஒத்துழைக்கவில்லை என கூறப்படும் நிலையில், காவலா்கள் அவரை தரையில் கீழே தள்ளியுள்ளனா். பின்னா், கௌரவின் கழுத்தில் காவலா் முட்டியால் கடுமையாக அழுத்தியுள்ளாா். இதனால் கழுத்து நெறிக்கப்பட்டு, அவா் சுயநினைவை இழந்துள்ளாா். தொடா்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
சம்பவத்தின் விடியோ காட்சிகளில் ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று கௌரவ் கூச்சலிடுகிறாா். அதேநேரம், காவலா்கள் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக அழுதவாறு அமிா்தபால் கௌா் சம்பவத்தைப் படம்பிடிக்கிறாா்.
கைது முயற்சிக்கு ஒத்துழைக்காமல் கௌரவ் வன்முறையாக நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், ‘எனது கணவா் மது அருந்தியிருந்தாா்; சப்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். ஆனால், எந்தவகையிலும் வன்முறையில் ஈடுபடவில்லை’ என்று அமிா்தபால் கௌா் குற்றஞ்சாட்டுகிறாா்.
அமெரிக்காவில் காவலரின் வன்முறையில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்துடன் கௌரவின் கைது நடவடிக்கை ஒத்துப்போவதாக விமா்சனம் எழுந்துள்ளது. ஜாா்ஜ் ஃபிளாய்ட்டின் கொலை, அமெரிக்காவில் கருப்பின மக்களின் மாபெரும் போராட்டத்தைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.