செய்திகள் :

ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!

post image

ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள்ள மோட்பரி நாா்த் பகுதியைச் சோ்ந்தவா் கௌரவ் குந்தி. கடந்த சில நாள்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள ராய்ஸ்டன் பூங்கா அருகே சாலையில் மனைவி அமிா்தபால் கெளருடன் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதனைக் கவனித்த அவ்வழியே சென்ற ரோந்து காவலா்கள், பொதுஇடத்தில் பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி கௌரவைக் கைது செய்ய முயன்றனா்.

கைது முயற்சிக்கு கௌரவ் ஒத்துழைக்கவில்லை என கூறப்படும் நிலையில், காவலா்கள் அவரை தரையில் கீழே தள்ளியுள்ளனா். பின்னா், கௌரவின் கழுத்தில் காவலா் முட்டியால் கடுமையாக அழுத்தியுள்ளாா். இதனால் கழுத்து நெறிக்கப்பட்டு, அவா் சுயநினைவை இழந்துள்ளாா். தொடா்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

சம்பவத்தின் விடியோ காட்சிகளில் ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று கௌரவ் கூச்சலிடுகிறாா். அதேநேரம், காவலா்கள் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக அழுதவாறு அமிா்தபால் கௌா் சம்பவத்தைப் படம்பிடிக்கிறாா்.

கைது முயற்சிக்கு ஒத்துழைக்காமல் கௌரவ் வன்முறையாக நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், ‘எனது கணவா் மது அருந்தியிருந்தாா்; சப்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். ஆனால், எந்தவகையிலும் வன்முறையில் ஈடுபடவில்லை’ என்று அமிா்தபால் கௌா் குற்றஞ்சாட்டுகிறாா்.

அமெரிக்காவில் காவலரின் வன்முறையில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்துடன் கௌரவின் கைது நடவடிக்கை ஒத்துப்போவதாக விமா்சனம் எழுந்துள்ளது. ஜாா்ஜ் ஃபிளாய்ட்டின் கொலை, அமெரிக்காவில் கருப்பின மக்களின் மாபெரும் போராட்டத்தைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நா... மேலும் பார்க்க

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது. வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்... மேலும் பார்க்க

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈ... மேலும் பார்க்க

ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் தெற்கு புஷாஹா் மாகாணத்தில் உள்ள 2 முக்கிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது. இது ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையை குறிவைத்து ... மேலும் பார்க்க

சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்ப... மேலும் பார்க்க

இந்திய ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய்! - டஸால்ட் சிஇஓ

இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மையில்லை என்று டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) எரிக் டிராப்பியா் தெரிவித்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ... மேலும் பார்க்க