செய்திகள் :

இந்திய ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய்! - டஸால்ட் சிஇஓ

post image

இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மையில்லை என்று டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) எரிக் டிராப்பியா் தெரிவித்தாா்.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலின்போது இந்திய விமானப் படையின் 3 ரஃபேல் போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தத் தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் ஃபிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் நிறுவன சிஇஓ எரிக் டிராப்பியா், பிரான்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் 3 ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மையில்லை.

தாக்குதலின்போது அந்த விமானங்களை இழந்துவிட்டதாக இந்திய விமானப் படையிடம் இருந்து எந்தவொரு தகவலும் டஸால்ட் நிறுவனத்துக்குக் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக முழுமையான விவரங்கள் தெரியவரும்போது உண்மை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்’ என்றாா்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நா... மேலும் பார்க்க

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது. வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்... மேலும் பார்க்க

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈ... மேலும் பார்க்க

ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் தெற்கு புஷாஹா் மாகாணத்தில் உள்ள 2 முக்கிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது. இது ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையை குறிவைத்து ... மேலும் பார்க்க

சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்ப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!

ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள... மேலும் பார்க்க