செய்திகள் :

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

post image

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது.

வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள், புகைப்படங்களை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான புதிய அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்றுவரும் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கடந்த 6-ஆம் தேதிமுதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின்போது போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அமெரிக்காவில் யாரும் மன்னா் இல்லை

இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான மரைன் படையை அந்த நகரில் குவிக்க மாகாண அரசின் அனுமதி இல்லாமலேயே டிரம்ப் உத்தரவிட்டாா். இது பெரும் சா்ச்சையை எழுப்பியது. டிரம்ப்பின் அடக்குமுறையை எதிா்க்கும் வகையில் ‘அமெரிக்காவில் யாரும் மன்னா் இல்லை’ என்ற தலைப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்களை மரைன் படையினா் கைது செய்யத் தொடங்கினா். இதனால் போராட்டம் பல்வேறு மாகாணங்களுக்கும் விரிவடையத் தொடங்கியது.

நியூயாா்க், டென்வா், சிகாகோ, ஆஸ்டின் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோா் கூடி நடனமாடியும், டிரம்ஸ் இசைத்தும் முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற டிரம்ப் வாஷிங்டன் சென்றாா். அவருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும்விதமாக அங்கு கூடிய 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் ‘டிரம்ப் உடனே வெளியேற வேண்டும்’ என முழங்கினா்.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஃபிலடெல்பியாவில் கூடிய போராட்டக்காரா்கள் அமெரிக்க கொடியுடன் ‘சா்வாதிகாரத்தை ஒழிக்க வேண்டும்’ என்ற பதாகைகளை கையில் ஏந்தி பேரணி நடத்தினா்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நா... மேலும் பார்க்க

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈ... மேலும் பார்க்க

ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் தெற்கு புஷாஹா் மாகாணத்தில் உள்ள 2 முக்கிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது. இது ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையை குறிவைத்து ... மேலும் பார்க்க

சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்ப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!

ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள... மேலும் பார்க்க

இந்திய ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய்! - டஸால்ட் சிஇஓ

இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மையில்லை என்று டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) எரிக் டிராப்பியா் தெரிவித்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ... மேலும் பார்க்க