செய்திகள் :

``திமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது'' - ஆர்.பி.உதயகுமார்

post image

"ஒருவரை ஒருவர் தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்கே போய் புகார் அளிப்பது?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.கண்ணியம்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கிய ஆர்.பி.உதயகுமார் செயதியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், தற்போது காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை, ஏற்கெனவே செல்லம்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டார், இன்று காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவரை ஒருவர் தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்க போய் புகார் அளிப்பது? காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும், இதுதான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

உழைக்கின்ற உத்தமராக உதயநிதியை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக சுற்றுப்பயணம் வருகிறார்கள். அப்பா ஒருபுறம், மகன் ஒருபுறம் சுற்றி வந்து விளம்பரம் செய்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை இனிமேல் இருக்கும் 6 மாதங்களில் எப்படி செய்ய முடியும்? விளம்பரத்திற்காக ஊர் சுற்றி வருவதால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

`உடன்பிறப்பே வா' என்ற நிகழ்ச்சியை தொகுதி வாரியாக நடத்தும் ஸ்டாலின் உசிலம்பட்டி தொகுதியினரை முதலில் அழைத்த ஸ்டாலின், திமுக தொடங்கிய காலத்திலிருந்து ஒரு முறை கூட உசிலம்பட்டியில் சூரியன் உதிக்கவில்லையே என்று கேள்வி எழுப்பி உள்ளார். உசிலம்பட்டி எப்போதுமே இரட்டை இலையை, எம்ஜிஆரை நேசிக்கிற மக்கள் உள்ள தொகுதி என்பதால் பல ஆண்டுகளாக அதிமுக வெற்றி வாகை சூடி வருகிறது, இனிமேலும் வெற்றி வாகை சூடும்.

எத்தனை முறை உடன்பிறப்பே வா என்று அழைத்தாலும் பலனில்லை, தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

தங்க காசுகளை கொட்டி கொடுத்து உடன்பிறப்புகளை சரி செய்துவிட்டு, மக்களிடம் இந்த ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்து விடலாம் என்றுதான் இந்த நாடக கம்பெனி நினைக்கிறது. அவர்கள் நடத்துகிற நாடகத்தை நம்ப தமிழ்நாட்டில் ஆள் இல்லை. அதிலும் உசிலம்பட்டி தொகுதியில் ஆளே இல்லை" என்றார்.

`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. அப்பகுதி விவசாயிகளிடம் அந்த ஆலை கரும்பு கொள்முதல் செய்தது. கரும்பு கொடுத்த விவசாயி... மேலும் பார்க்க

``உச்ச நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வாதாட நீதியரசர்கள் துணை நிற்க வேண்டும்'' - முதல்வர் ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் மன்னார்குடி நகரச் செயலாளர் வீரா.கணேசன், இவரது தம்பி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன் இல்ல திருமணம் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற... மேலும் பார்க்க

கல்லணை, ரோடு ஷோ, சிலை திறப்பு, நலத்திட்ட உதவி.. முதல்வரின் தஞ்சாவூர் விசிட்

கடந்த 12 - ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்டா குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிலையில், தஞ்சையில் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்

ஈரான் மீது இஸ்ரேல் 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' நடத்த தொடங்கி இன்றோடு நான்கு நாள் ஆகிறது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை பொழிந்து வருகிறது.இந்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இரு... மேலும் பார்க்க

Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்!

நுரையீரல் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுத் தரும் சுவாசக் கருவி. அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ஆயுளை அதிகரிக்க முடியும் என்கிற ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன், ஆரோக... மேலும் பார்க்க