செய்திகள் :

கல்லணை, ரோடு ஷோ, சிலை திறப்பு, நலத்திட்ட உதவி.. முதல்வரின் தஞ்சாவூர் விசிட்

post image

கடந்த 12 - ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்டா குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிலையில், தஞ்சையில் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தஞ்சைக்கு வருகை தந்தார். 15 - ம் தேதி மதியம் திருச்சிக்கு விமானம் மூலம் வந்த அவரை, அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து, கார் மூலம் கல்லணைக்குச் சென்ற அவர், அங்குள்ள நீர்வள ஆதாரத்துறையின் ஓய்வு இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்.

walk show

அதன்பிறகு, ஓய்வு அறையில் இருந்து 200 மீட்டர் தூரம் நடந்து வந்து கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் டெல்டா குறுவை சாகுபடிக்காக மலர் தூவி தண்ணீர் திறந்தார்.

இதற்கு முன்பு கடந்த 1998 - ம் வருஷம், ஜூன் 23 - ம் தேதி அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கல்லணையை திறந்திருக்கிறார். அதன்பிறகு, தந்தை வழியில் இரண்டாவது முதல்வராக கல்லணையை திறந்திருக்கிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி, தஞ்சாவூர் என்று பல பகுதிகளில் முதல்வர் 'ரோடு ஷோ' நடத்தினார்.

kalaignar silai

அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூர் ராமநாதனில் இருந்து காரில் இருந்து இறங்கி இருமங்கிலும் நின்றிருந்த மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு நடந்தே பழைய பேருந்து நிலையம் வரை சென்றார்.

இரவு 9.30 மணிக்கு, பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததோடு, அருகில் இருந்த கலைஞரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

அவருக்கு வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது. இரவு ஓய்வெடுத்தவர், இன்று தி.மு.க தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

kalaignar silai open

இதையடுத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முதல்வரின் தஞ்சாவூர் விசிட்டுக்காக கட்சியினர் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. அப்பகுதி விவசாயிகளிடம் அந்த ஆலை கரும்பு கொள்முதல் செய்தது. கரும்பு கொடுத்த விவசாயி... மேலும் பார்க்க

``உச்ச நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வாதாட நீதியரசர்கள் துணை நிற்க வேண்டும்'' - முதல்வர் ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் மன்னார்குடி நகரச் செயலாளர் வீரா.கணேசன், இவரது தம்பி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன் இல்ல திருமணம் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற... மேலும் பார்க்க

``திமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது'' - ஆர்.பி.உதயகுமார்

"ஒருவரை ஒருவர் தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்கே போய் புகார் அளிப்பது?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மு.க.ஸ்டாலின்மத... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்

ஈரான் மீது இஸ்ரேல் 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' நடத்த தொடங்கி இன்றோடு நான்கு நாள் ஆகிறது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை பொழிந்து வருகிறது.இந்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இரு... மேலும் பார்க்க

Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்!

நுரையீரல் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுத் தரும் சுவாசக் கருவி. அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ஆயுளை அதிகரிக்க முடியும் என்கிற ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன், ஆரோக... மேலும் பார்க்க