செய்திகள் :

கோவை: கத்தி முனையில் காருடன் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்

post image

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் திருச்சூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஜெய்சன் கோவை மற்றும் சென்னையில் தன் கடைக்குத் தேவையான நகைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி வருகிறார்.

தங்கம்
தங்கம்

இவர் கடந்த 13-ம் தேதி சென்னையில் 1.25 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை வாங்கி வந்துள்ளார். இதற்காக ஜெய்சன், அவரிடம் பணியாற்றும் ஊழியர் விஷ்ணு ஆகியோர் சென்னை சென்றுவிட்டு ரயில் மூலம் கோவை திரும்பினர்.

14-ம் தேதி அதிகாலை கோவையில் இருந்து கார் மூலம் திருச்சூர் புறப்பட்டுள்ளனர். அவர்களின் கார் தமிழ்நாடு – கேரளா எல்லையான க.க. சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அங்குத் திடீரென்று மற்றொரு காரில் வந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெய்சன் வந்த காரைக் கத்தியைக் காட்டி வழி மறித்துள்ளனர்.

தங்கக் கடத்தல்
தங்கக் கடத்தல்

தொடர்ந்து ஜெய்சன் காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் சென்ற அந்த நபர்கள், அவர்களுடன் சிறிது தூரம் காரில் பயணித்தனர். பிறகு ஜெய்சன், விஷ்ணுவைக் கீழே இறக்கிவிட்டு, காருடன் தங்க கட்டியைக் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து ஜெய்சன் க.க. சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இரண்டு மாநில காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனாலும், வாகனத்தைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஜெய்சனின் கார், பாலக்காடு மாவட்டம் வழுக்கல் பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.

”விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களையும் கைது செய்வோம்” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"கட்டப்பஞ்சாயத்து செய்யவா 84,000 பேர் வாக்களித்தார்கள்?" - ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி சரமாரி கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு; ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி காட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திரு... மேலும் பார்க்க

ஹரியானா: காணாமல் போன நடிகை கால்வாயில் பிணமாக மீட்பு; உடனிருந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த மாடல் நடிகை சீத்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.இது குறித்து சீத்தல் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சீத்... மேலும் பார்க்க

விஸ்வரூபம் எடுக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு - விசாரணை வளையத்தில் ஏடிஜிபி ஜெயராமன், எம்.எல்.ஏ!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு அருகே உள்ள களம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்ய ஸ்ரீ என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாத... மேலும் பார்க்க

ரூ.2,676 கோடி மெகா மோசடி; 70,000 பேரை ஏமாற்றிய இரண்டு சகோதரர்கள் - மோசடியின் முழு விவரம்

தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி எனக் கூறப்படுகிறது. டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிய ... மேலும் பார்க்க

போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாட... மேலும் பார்க்க