செய்திகள் :

ஹரியானா: காணாமல் போன நடிகை கால்வாயில் பிணமாக மீட்பு; உடனிருந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை

post image

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த மாடல் நடிகை சீத்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.

இது குறித்து சீத்தல் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சீத்தலைத் தேடி வந்தனர். பானிபட் பகுதியில் உள்ள காந்தா என்ற கிராமத்துக் கால்வாய் ஒன்றில் கார் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

உடனே போலீஸார் அங்குச் சென்று கால்வாயில் கிடந்த பெண்ணை மீட்டபோது அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அப்பெண்தான் சீத்தல் என்று அவரது உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதோடு கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டபோது உள்ளே வாலிபர் ஒருவர் காயமடைந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சீத்தல்
சீத்தல்

அந்த வாலிபர் சீத்தலின் காதலராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் நடத்திய ஆரம்பக் கட்ட விசாரணையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சுனில் என்பவருடன் இசை ஆல்பம் ஒன்றின் படப்பிடிப்புக்காக சீத்தல் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதன் பிறகு கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சீத்தல் மட்டும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சீத்தலுடன் காரில் இருந்த சுனில் என்ற அந்த நபரிடம் விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

சீத்தல் உடம்பிலும் காயம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கோவை: கத்தி முனையில் காருடன் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் திருச்சூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். ஜெய்சன் கோவை மற்றும் சென்னையில் தன் கடைக்குத் தேவையான நகைகளை ஆர்டர் கொடுத்த... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு; ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி காட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திரு... மேலும் பார்க்க

விஸ்வரூபம் எடுக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு - விசாரணை வளையத்தில் ஏடிஜிபி ஜெயராமன், எம்.எல்.ஏ!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு அருகே உள்ள களம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்ய ஸ்ரீ என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாத... மேலும் பார்க்க

ரூ.2,676 கோடி மெகா மோசடி; 70,000 பேரை ஏமாற்றிய இரண்டு சகோதரர்கள் - மோசடியின் முழு விவரம்

தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி எனக் கூறப்படுகிறது. டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிய ... மேலும் பார்க்க

போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாட... மேலும் பார்க்க

பெற்றோரை பராமரிக்காத மகன்; கோபத்தில் கொலைசெய்த தந்தை - மணப்பாறை அருகே அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது: 78). இவரது மகன் அண்ணாதுரை (வயது: 55). கந்தசாமி தனது மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வரும் நிலையில், அதன் அருகில் அண்ணாதுர... மேலும் பார்க்க