செய்திகள் :

ரூ.2,676 கோடி மெகா மோசடி; 70,000 பேரை ஏமாற்றிய இரண்டு சகோதரர்கள் - மோசடியின் முழு விவரம்

post image

தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி எனக் கூறப்படுகிறது. டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிய நகரமாக உருவாகும் இந்த திட்டத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2042-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையடையும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்து ராஜஸ்தானை சேர்ந்த இருவர் சுமார் 70,000 பேரை ஏமாற்றியதாக புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பண மோசடி
பண மோசடி

யார் அந்த இருவர்?

ராஜஸ்தானைச் சேர்ந்த ரன்வீர் பிஜாராணி 2014-ம் ஆண்டு முதன்முதலில் தோலேராவில் நிலத்தை வாங்கினார். இவரின் சகோதரர் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சுபாஷ் பிஜாராணி ரூ.30 லட்சத்தில் மற்றொரு நிலத்தை வாங்கினார். பின்னர் இருவரும் சேர்ந்து 'நெக்ஸா எவர்கிரீன்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கி 2021-ல் அகமதாபாத்தில் பதிவு செய்தனர்.

மோசடி:

பிகாஸ் எனும் நில அளவீடு முறைப்படி சுமார் 1300 நிலங்கள் இருப்பதாக நெக்ஸா எவர்கிரீன் நிறுவனம் அறிவித்தது. மற்றொரு பக்கம் இந்த நெக்ஸா எவர்கிரீன் தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருவதாகவும் விளம்பரப்படுத்தியது. இங்கு நிலம் வாங்குபவர்களுக்கும், நிலம் வாங்க ஏஜெண்ட்டாக இருப்பவர்களுக்கும் கமிஷன் கொடுப்பதாக உறுதியாளித்தது. அதிக வாடிக்கையாளர்களை கொண்டுவருபவர்களுக்கு கார், வீடு, பைக் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த அறிவுப்புகளை நம்பிய பலரும் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். பல கோடிகள் கமிஷனாக விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பண மோசடி

தப்பி ஓட்டம்:

இந்த திட்டத்தில் சேர்ந்த சுமார் 70,000 பேரிடமிருந்து ரூ.2,676 கோடி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. ஏமாற்றியப் பணத்தில் ராஜஸ்தானில் சொகுசு கார்கள், ஹோட்டல்கள், அகமதாபாத்தில் பிளாட்கள் மற்றும் கோவாவில் 25 ரிசார்ட்டுகளை வாங்கி குவித்திருக்கின்றனர். மோசடி நடந்ததாகக் செய்திகள் வெளியானப் பிறகு, அவர்கள் தங்கள் அனைத்து அலுவலகங்களையும் மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்

கோவை: கத்தி முனையில் காருடன் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் திருச்சூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். ஜெய்சன் கோவை மற்றும் சென்னையில் தன் கடைக்குத் தேவையான நகைகளை ஆர்டர் கொடுத்த... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு; ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி காட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திரு... மேலும் பார்க்க

ஹரியானா: காணாமல் போன நடிகை கால்வாயில் பிணமாக மீட்பு; உடனிருந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த மாடல் நடிகை சீத்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.இது குறித்து சீத்தல் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சீத்... மேலும் பார்க்க

விஸ்வரூபம் எடுக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு - விசாரணை வளையத்தில் ஏடிஜிபி ஜெயராமன், எம்.எல்.ஏ!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு அருகே உள்ள களம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்ய ஸ்ரீ என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாத... மேலும் பார்க்க

போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாட... மேலும் பார்க்க

பெற்றோரை பராமரிக்காத மகன்; கோபத்தில் கொலைசெய்த தந்தை - மணப்பாறை அருகே அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது: 78). இவரது மகன் அண்ணாதுரை (வயது: 55). கந்தசாமி தனது மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வரும் நிலையில், அதன் அருகில் அண்ணாதுர... மேலும் பார்க்க