செய்திகள் :

TV Update: படத்திற்கு மாலை - அர்த்திகா அப்செட்?; ரெட்கார்டுக்கு கொந்தளிக்கும் Pandian Stores நடிகர்

post image

'ரெட் கார்டுதானே, போட்டுதான் பாரேன்!'

'சீரியல் ஒன்றில் நடிக்க கமிட் ஆகிவிட்டு புரொமோ ஷூட் முடிந்த நிலையில் நடிக்க மறுத்து விட்டார்' என நடிகை ரவீனாவுக்குச் சில மாதங்களுக்கு முன் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சீரியல் ஏரியாவில் முதன் முதலாக ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நடிகை இவர்தான் என்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரெட் கார்டு பேச்சு எழுந்துள்ளது.

'சரவணன் மீனாட்சி' தற்போது ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன். இவருக்குச் சில தினங்களுக்கு முன் டிவி நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பதாகச் சொல்லி ஒருவர் பேசினாராம்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

இது குறித்து ரவிச்சந்திரன் பேசும்போது, "'சார் நீங்க ஒரு சீனியர் நடிகர். இருந்தாலும் இன்னும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாம இருக்குறீங்க. அதனால் உடனே சங்கத்தில் சேர்ந்துடுங்க'ன்னு சொன்னார் அவர்.

சீரியல் நடிகர், நடிகைகளுக்கு இன்னைக்கு நிறைய பிரச்னைகள் இருக்கு. தமிழ்நாட்டைச் சேர்ந்த சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் பலர் இன்னைக்குப் போதுமான வேலை வாய்ப்பு இல்லாம வருமானத்துக்கு வழி இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.

அவங்களுடைய பிரச்னைகளுக்கெல்லாம் இந்தச் சங்கங்கள் உருப்படியா எதுவும் செய்யறதில்லை. அதனாலேயே எனக்கு இந்த சங்க நடவடிக்கைகள் மேல எப்பவுமே நம்பிக்கை வந்ததில்லை.

அதனால 'ஹீரோ, ஹீரோயின் மட்டுமில்லாம அப்பா அண்ணன் கேரக்டருக்குக் கூட இன்னைக்கு உள்ளூர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு வாய்ப்பு தராம பக்கத்து மாநிலங்கள்ல இருந்து நடிகர் நடிகைகளைக் கூட்டிட்டு வர்றாங்க. இந்த நிலைமையை மாத்த சங்கம் முதல்ல ஏதாவது செய்யட்டும். பிறகு உறுப்பினராவது பத்தி யோசிக்கறேன்னு சொன்னேன்.

'இது தப்புங்க. நீங்க இந்த மாதிரி பேசிட்டிருந்தீங்கன்னா ரெட் கார்டு கொடுத்திருவாங்க. தேவையில்லாம சிக்கலைச் சந்திக்காதீங்க'னு பதிலுக்குச் சொன்னார். நானும் உடனே, ரெட் கார்டுதானே, தாராளமா தரட்டும்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

நான் சட்ட நடவடிக்கை மூலமா அதைப் பாத்துக்கறேன். உங்களுக்கு ஒரு சட்டம் இருக்கும், அதை என்னைக் கட்டுப்படுத்தாது. ஒரு இந்தியக் குடிமகனா எனக்குப் பிடிச்ச எந்தவொரு வேலையையும் செய்ய எனக்கு உரிமை இருக்கு'னு சொன்னதும் தொடர்பைத் துண்டிச்சுட்டார் அந்த நபர். சங்கத்துல சேரலைன்ன்னா ரெட் கார்டுங்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா" என்கிறார் ரவிச்சந்திரன்.

உரிமைக்குரலே வா

அடுத்த செய்தியும் டிவி நடிகர் சங்க பஞ்சாயத்து தொடர்பானதே. சில தினங்களுக்கு முன் சின்னத்திரை நடிகர் சங்கப் பொதுக்குழு கூடியது நினைவிருக்கலாம்.

கூட்டத்தில் தற்போதைய செயலாளர் போஸ் வெங்கட் அணியினருக்கும் சங்க நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் தலைவர் ரவி வர்மா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து சலசலப்புடனேயே கூட்டம் முடிவடைந்தது.

'பிக்பாஸ்' தினேஷ்

ரவி வர்மாவை வரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்பதே அவர் தரப்பினர் வைத்த கோரிக்கை. அதைக் கண்டு கொள்ளாமல் கூட்டத்தை முடித்து விட்டனர் போஸ் வெங்கட் தரப்பினர்.

இந்நிலையில் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் சங்க அலுவலகம் அமைந்திருக்கும் ஏரியாவில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுக்குழுவில் ரவிவர்மாவுக்காகப் பேசிய தினேஷ் கோபால்சாமியை 'உறுப்பினர்களின் உரிமைக்குரல்' எனப் புகழ்ந்து சிலர் ஒட்டியிருக்கும் போஸ்டர்தான் அவை.

அதாவது ரவி வர்மா போட்டியிட முடியாத பட்சத்தில் அவருக்குப் பதில் தினேஷ் தலைமையில் ஒரு அணி வரும் தேர்தலில் போட்டியிடலாமென்றும் அதற்கான முன்னோட்டமே இந்த போஸ்டர்கள் என்றும் சொல்கிறார்கள்.

தினேஷுக்கு ஆதரவாக போஸ்டர்

தற்போதைய நிர்வாகிகளான போஸ் வெங்கட், சிவன் சீனிவாசன் அணி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இளம் நடிகர்கள் சேர்ந்து ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள், இந்த நிலையில் தினேஷ் தலைமையில் ஒரு அணி என்கிற போது ஆகஸ்டில் நடக்கவிருக்கும் சக்கத் தேர்தலில் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் தெரிகிறது.

'போட்டோவுக்கு மாலை'யால் என்ட்ரி மகிழ்ச்சி போச்!

'ஒரு சீரியலில் புது முகமாக என்டரி தந்திருக்கும் தருணத்தில் இன்னொரு சேனலில் அதே ஆர்ட்டிஸ்ட்டின் புகைப்படத்துக்கு மாலை போட்டுக் காட்டினால் சம்பந்தப்பட்ட ஆர்ட்டிஸ்ட் எவ்வளவு காயம்படுவார்' என சீரியல் ரசிகர்கள் பலரும் நடிகை ஒருவருக்காக 'உச்' கொட்டி வருகின்றனர்.

அர்த்திகா
அர்த்திகா

'கார்த்திகை தீபம்' தொடரில் நடித்து வந்தவர் நடிகை அர்த்திகா. அந்த தொடரின் முதல் சீசன் முடிவடைந்து இரண்டாவது பார்ட் சில மாதங்களுக்கு முன் ஆரம்பமானது. இரண்டாம் பாகத்தில் அர்த்திகா நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது புதிதாக 'வினோதினி' என்கிற பகல் நேர சீரியலில் ஹீரோயினாக கமிட் ஆகி நடிக்கத் தொடங்கியுள்ளார் அவர். முதலில் நடித்த சேனலும் இப்போது நடிக்கும் சேனலும் வேறு வேறு.

'அதெல்லாம் இருக்கட்டும், ஆனா இப்ப நடக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு. ஏதோ வேணும்னே செய்யறது மாதிரிதான் தெரியுது' என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.

'அந்தப் பொண்ணு அந்த தொடரில் இரண்டாவது சீசன்ல ஏன் நடிக்கலதான். அவரவர் விருப்பம் சார்ந்தது அது. அதனால் முதல் சீசன் முடிவடையறப்ப சீரியல்ல அவங்க இறந்துடற மாதிரி காட்டி முடிக்கிறாங்க.

அர்த்திகா

ஆனா அவங்க புதுசா வேறொரு சேனல்ல வேற ஒரு சீரியல்ல கமிட் ஆகி அந்த சீரியலின் ஒளிபரப்பு தொடங்கறப்ப, முன்னாடி நடிச்ச சேனல் அவங்க போட்டோவுக்கு மாலை போட்டபடி காட்டறதைச் சாதாரணமானதா எடுத்துக்க முடியலை . சேனல்களுக்கிடையில் பிசினஸ் போட்டி இருக்கும்தான், ஆனா இப்படியெல்லாம் பண்ணலாமா' என ஆதங்கப் படுகின்றனர் அவர்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Rajasekar: "இப்போ இருக்கிற சூழல்ல 10 ரூபாய் கிடைச்சாலும் பெருசு!" - ராஜசேகர் மனைவி தாரா

சின்னத்திரை நடிகர் மற்றும் இயக்குநர் ராஜசேகர் கடந்த 2019-ம் ஆண்டு இயற்கை எய்தினார். ராஜசேகர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு கடன் வாங்கி புதிய வீடு ஒன்றை வாங்கியிருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு... மேலும் பார்க்க

Saregamapa: "நாங்க கஷ்டப்படுறனாலதான் அவன் பாடவே ஆரம்பிச்சான்" - திவினேஷின் பெற்றோர் பேட்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் `சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4' நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பல குழந்தைகள் மக்கள் கவனத்தை ஈர்த்தனர். இதன் இறுதிப்போட்ட... மேலும் பார்க்க

Anshitha: 'கடின உழைப்பின் பலன்!' - புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அன்ஷிதா!

சீரியல்கள் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகை அன்ஷிதா. கடந்தாண்டு விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார் அன்ஷித்தா. பிக்பாஸ் வீட்டிலும் 50... மேலும் பார்க்க