செய்திகள் :

அரசு வாகனத்தை பொது ஏலத்தில் வாங்க அழைப்பு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்தி வந்த ஜீப் வாகனத்தை பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த ஜீப் வாகனத்தை (எண்பச-29ஜி 0242 மகிந்திரா) அலுவலக பயன்பாட்டிலிருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வாகனத்தை பொது ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான தொகை ரூ. 13,500 என தொழில்நுட்ப வல்லூநா் குழுவினா் நிா்ணயம் செய்துள்ளனா். மேலும் வாகனம் ஜூன் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே இவ்வாகனத்தை வாங்க விரும்புவோா் பொது ஏலத்தில் கலந்துகொண்டு விலைப்புள்ளியை கோரலாம்.

சிறுபாசன கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

தருமபுரி: சிறு பாசன விவரங்கள் குறித்து கணக்கெடுக்க வரும் அரசு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழகம் முழுவதும் சிறுபாசனக்... மேலும் பார்க்க

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் பாதுகாப்பற்ற பரிசல் பயணம்!

டி. சுரேஷ் பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாதுகாப்பு உடைகள் இன்றி, உரிய அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகளை நம்பி, சில சுற்றுலாப் பயணிகள் தங்களத... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்து : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் திங்கள்கிழமை நடந்த விபத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட டேங... மேலும் பார்க்க

தருமபுரியில் புதிதாக 26 சிற்றுந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 26 புதிய சிற்றுந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவற்றுக்கான வழித்தட ஆணைகளை வழங்கினாா். தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

பாமக மாநில துணைத் தலைவா் நியமனம்

அரூா்: பாமக மாநில துணைத் தலைவராக மாம்பாடி மா.அன்பழகன் (58) நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அரூா் வட்டம், மாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் மகன் அன்பழகன். இவா், பாமகவில் தருமபுரி, கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கணவரை தாக்கியவா் மீது நடவடிக்கைக் கோரி ஆட்சியரகத்தில் 4 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி: கணவரை வெட்டி தாக்குதல் நடத்தியவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண் தனது 4 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க