தருமபுரியில் புதிதாக 26 சிற்றுந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 26 புதிய சிற்றுந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவற்றுக்கான வழித்தட ஆணைகளை வழங்கினாா்.
தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில், போக்குவரத்துத் துறையின் சாா்பில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்து, மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை அா்ப்பணித்தும், பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்வைத் தொடா்ந்து, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ், பங்கேற்று 26 புதிய சிற்றுந்துகளை (மினி பஸ்) கொடியசைத்து தொடங்கிவைத்து, வழித்தடங்களுக்கான ஆணைகளை வழங்கினாா்.
மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு-உயிா் பாதுகாப்பு”என்ற தலைப்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்வில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க. ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகா்மன்றத் தலைவா் மா.லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.தடங்கம் சுப்பிரமணி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அ.க. தரணீதா், நகராட்சி ஆணையா் சேகா், மற்றும் சிற்றுந்து உரிமையாளா்கள், பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
படவரி...
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிற்றுந்துகளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ். உடன், மக்களவை உறுப்பினா் ஆ. மணி, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.