செய்திகள் :

Iran: நேரடி ஒளிபரப்பின்போது நடந்த ஏவுகணைத் தாக்குதல்; அதிர்ந்து தீப்பற்றிய தொலைக்காட்சி ஸ்டுடியோ!

post image

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஈரானும் - அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடந்தி வந்தது. ஈரான் அதன் அணுசக்தி திறனை வளர்ப்பதைத் தடுப்பதே நோக்கம் என அறிவித்த இஸ்ரேல், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் இருந்த பகைமை தீவிரமடைந்து போர் தொடங்கியிருக்கிறது.

 Iran State TV Studio
Iran State TV Studio

இந்த நிலையில், ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனியை கொல்லும்வரைஇந்தப் போர்முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலின் இந்த முடிவை கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையில், இருநாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

sahar imami
sahar imami

இதுபோன்ற ஒரு தாக்குதலில், இஸ்ரேலிய ஏவுகணை ஈரானிய அரசின் செய்தி ஒளிபரப்பு நிலையத்தைத் தாக்கியது. ஈரான் அரசின் தொலைக்காட்சி ஸ்டுடியோவின் வளாகத்தை ஏவுகணை தாக்குவதைக் காட்டும் காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. நிகழ்ச்சிக்கு நடுவில் இருந்த தொகுப்பாளர் சஹார் இமாமி அந்த இடத்திலிருந்து வெளியேறினார். ஏவுகணையின் தாக்கத்தால் முழு ஸ்டுடியோவும் அதிர்ந்தது.

ஈரான் அளித்திருக்கும் தகவலின்படி தொகுப்பாளர் சஹார் இமாமி உள்ளிட்ட ஸ்டுடியோவில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் அவர் வேறு தொடர்பு வழியாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியிருக்கின்றனர். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ``தெஹ்ரானில் வசிப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் இல்லை என்றாலும், தெஹ்ரானில் வசிப்பவர்கள் சர்வாதிகாரத்தின் விலையைச் செலுத்த வேண்டும். தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்பு பகுதிகளிலிருந்து வீடுகளை காலி செய்ய வேண்டும். இஸ்ரேலில் வசிப்பவர்களை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

அகமதாபாத்: உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதி - இந்திய வம்சாவளி UAE மருத்துவர்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக மனம் வருந்தி, அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்.கடந்த வியாழன் அ... மேலும் பார்க்க

Plane Crash: DNA அடையாளம் மூலம் 80 உடல்கள் ஒப்படைப்பு.. விபத்து இடத்தில் தயாரிப்பாளர் மாயம்?

அகமதாபாத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வ... மேலும் பார்க்க

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க