செய்திகள் :

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

post image

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.

2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பாரனில் உள்ள அன்டா பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கிருஷ்ண குமார்.

தேனி வளர்ப்பவராக இருந்த அவர் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரின் நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. அவரது மனைவி மற்றும் மாமியார் குடும்பம் அவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சட்ட போராட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்காக அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் தனது மாமியார் வீட்டிற்கு அருகில், ஒரு தேநீர் கடையைத் திறந்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவியின் குடும்பத்தினர், அவரது மாமியார், இவர்மீது 498A பிரிவின் கீழ் வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை அவர் மறுத்து, அதற்கெதிராக சமூக விழிப்புணர்வு செய்யும் வகையில் , “498A டீ கஃபே” என்ற பெயரில் ஒரு தேநீர் கடையைத் தொடங்கியுள்ளார்.

வழக்கு பதிவு

இந்த முயற்சி வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் தனக்கு நீதி வேண்டுமென்ற நோக்கிலும் இதனை செய்து வருகிறார்.

அந்த டீக்கடையில் கைவிலங்கு அணிந்து அவர் தேநீர் தயாரிப்பதுதான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, தேநீர் கொதிக்கும்" என்ற குறிப்பிடப்பட்ட வாசகம் அவரது கடையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தன்னைப் போலவே, நீதி கிடைக்காமல் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்கள் மற்றும் பயணச் சுமைகளில் போராடும் ஆண்களுக்கு குரல் கொடுக்கும் நோக்கிலும் இது செயல்படுகிறது.

கிருஷ்ண குமாரின் இந்த தனித்துவமான முறை, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க